world

img

செம்படைத் தளபதி - பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,. தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் களில் என்.சங்கரய்யா அவர் களும் ஒருவர். விடுதலைப் போராட்ட வீரராக, தலை மறைவு கால புரட்சிக்கார ராக, எழுத்தாளராக, அர சியல்வாதியாக, இடதுசாரிச் சிந்தனையாளராக நம் மனக் கண் முன் விரியும் உன்னத மனிதர். தோழர் என்ற சொல் லுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். தன்வாழ்வின் முக்கிய மான கால கட்டங்களை மக் கள்நலம் சார்ந்த போராட்டங் களால் சிறையில் செலவிட்ட வர்.

இவர் வாழும் சமகாலத் தில் நாமும் வாழ்ந்து கொண் டிருக்கிறோம் என்பது நமக் கான பெருமை. அவருடன் பல தளங்களில் ஒன்றாக பய ணித்து இருப்பது எனக்கு கிடைத்த நற்பேறு. தமது அர சியல் வாழ்க்கையில் தன் பிள்ளை, பேரப்பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கான வர்களுக்கு சீர்திருத்த சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த சிந்தனையா ளர். ஜனசக்தி தத்துவ மாத இதழின் பொறுப்பாசிரியராக வும், தீக்கதிர் இதழின் ஆசி ரியராகவும் செவ்வனே இதழி யல் பணி செய்தவர். அரசி யலில் பல வெற்றி தோல்வி களை சந்தித்திருந்தாலும் தமது ஆளுமையால் எல்லா தலைவர்களையும் தன்பால் ஈர்த்த சிறந்த தலைவர். 1998-இல் கோவையில் நடந்த முஸ்லிம் விரோத கலவரங்களை கட்டுப்படுத் தும் நோக்கில் சமூக நல்லி ணக்க பேரணியை முன் நின்று நடத்திய உன்னத மனிதர். பாசிசச் சிந்தனை வாதிகளுக்கு தமது களப் பணிகளால் பதிலடி கொடுத்த செம்படைத் தளபதி. 

கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டாலும் இள கிய மனம் கொண்ட பண் பாளர். முதலாளித்துவம் தீவி ரமாகச் செயல்படும் போது சமூகநீதி பாதிக்கப்படும் என்ற உயர் சிந்தனையால் களமாடிக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கண்ட அவரது வாழ்க்கைப் பயணம் மேலும் செழுமையும் வலிமையும் பெற மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் இதயப்பூர்வ மாக வாழ்த்துகிறேன்.

;