world

img

நிருபர்கள் எங்கே போனார்கள்? - ஏ.எம்.ஜிகீஷ்

அண்மையில், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கிற ஒரு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  பொதுத்துறை நிறு வனங்களைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து  ஒரு போராட்ட இயக்கத்தை நடத்திட அந்தத் தொழிற் சங்கம் தீர்மானித்திருந்தது. அதையொட்டியே செய்தி யாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பொதுத்துறை தனியார்மயத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பொது வெளியில் அவ்வப்போது பெரும் விவாதங்கள் நடைபெற்று வருவதால், அரசியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்புடன் நான் பத்திரிகையாளர் கூட்டத்திற்குப் புறப்பட்டேன்.  தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளர்களுள் ஒருவர் செய்தியாளர்களிடையே உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எந்த நிருபரும் வரவில்லை

அழைப்பிதழில் குறித்திருந்த நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே நான் சென்று விட்டேன்.  என்னைத் தவிர வேறு எந்தப் பத்திரிகை யாளரும் அங்கே வந்திருக்கவில்லை.  சங்கப் பொறுப் பாளர்கள் என்னை அமரவைத்து உபசரித்ததுடன், கூட்டம் தாமதமாவதற்குப் பொறுத்துக்கொள்ளுமாறு மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.  அரை மணி நேரம் கடந்த பிறகும் நிலைமையில் மாற்றம் ஒன்றுமில்லை.  சங்க நிர்வாகிகள் பரபரப்புடன் அலை பேசி வாயிலாகப் பலரைத் தொடர்பு கொள்ள முயன்ற னர்.  மேலும் சில மணித்துளிகள் சென்ற பின் அவர் களது கடும் முயற்சிக்குப் பலனாக ஒரு யூடூயூபர் அரங்கினில் பிரவேசித்தார்.   சங்கத்தின் தேசிய செயலாளர், நடைபெறவுள்ள போராட்டத்தின் முழு விவரங்களையும், தங்களது வியூ கங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.  நாடு தழு விய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் தொடர் முழக்கப் போராட்டம் (தர்ணா), அதன்  நீட்சியாக தலைநகர் புதுதில்லியில், நாடாளு மன்றத்தை நோக்கிய பேரணி என்று முடிவு செய்யப் பட்டு இருப்பதாகத் தெரிவித்ததோடு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறினார். 

50 செட் இனிப்பும் காரமும்

போராட்டத்தின் நோக்கம் மற்றும் தன்மை குறித்து நான் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்து, பதிலும் பெற்றுக் கொண்டேன்.  ஆனால், கூட்டத்திற்கு வரும் செய்தியாளர்களுக்கென வாங்கி அங்கே ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த 50 செட் இனிப்பு, கார வகைகள் மற்றும் இரண்டு பெரிய ஃப்ளாஸ்க் தேநீரை என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை, அவை நாகரிகம் கருதி நான் அங்கு கேட்கவில்லை. பின்னர், அவர்கள் குறிப்பிட்ட தேதியில் புதுதில்லியில் நடை பெற்ற ‘நாடாளுமன்றத்தை நோக்கிய  பேரணி’யை நான் முழுமையாகப் பார்வையிட்டு, உடனடியாக செய்தித் தொகுப்பும் தயார் செய்தேன். பேரணியில் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி வகுத்து வந்தனர்.  அவர்களில் பெரும்பாலானோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரு பவர்கள்.  பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் ஊர்வலத்தில் திரளாகப் பங்கேற்றிருந்ததைப் பார்க்க முடிந்தது.

ஒரு தலைவரின் வேதனை

மேலே நான் விவரித்த பத்திரிகையாளர் கூட்டம் குறித்தான அனுபவம் எனக்குப் புதிதல்ல.  நான் நீண்ட காலமாகத் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை யும், கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வரு கிறேன்.  தொழிற்சங்கங்கள், அவை எந்த அரசியல் பின்னணி உடையதாக இருப்பினும், அவை நடத்து கின்ற பத்திரிகையாளர் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வு களில் நிருபர்களின் பங்கேற்பு என்பது அரிதானதாக, மிகமிகக்  குறைவானதாகவே இருந்து வருகிறது.  இந்தியாவின் தலைசிறந்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான (சிஐடியு-வின் தலைவர்)அமரர் எம்.கே. பாந்தே, நானும் கலந்துகொண்ட ஒரு சந்திப்பின்போது நிருபர்களிடையே வெளிப்படையாகவே இந்தப் பிரச்சனை குறித்துப் பேசலானார்.  மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டி த்து, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைச் சரியாக அறிந்துகொள்வதற்குத் தானும், சங்க நிர்வாகிகளும் பிபிசி நியூஸ், தி கார்டியன் போன்ற அயல் நாட்டுச் செய்தி ஊடகங்களையே பெரிதும் நம்பியிருப்பதாக அவர் அப்போது தெரிவித்தார்.

6 கோடி தொழிலாளர்கள்

இந்தியாவிலுள்ள 12 மத்திய தொழிற்சங்கங்களும் ஒட்டுமொத்தமாக 6 கோடிக்கும் மேலான தொழி லாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளன.  இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றோடு இணைக்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த கூட்ட மைப்புகளின் உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் மாநில அரசுகளால் அவ்வப்போது சரிபார்க்கப்படு கின்றன.  ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய சரி பார்ப்பு நடவடிக்கைகள் சமீப ஆண்டுகளாக நடைபெற வில்லை.  எந்தவிதமான அறிமுகமுமின்றி வெறும் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் போலன்றி, தொழிற் சங்கங்களின் உறுப்பினர் விவரங்கள் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்படுகின்றன.  மேலும், இந்த சங்கங்கள் தொழிற்சங்கப் பதிவாளரிடம் வருடா வருடம் முறையாக அறிக்கை சமர்ப்பித்து வருகின்றன. முழு விவரங்களுடன் கூடிய உறுப்பினர்கள் பட்டி யலும் இந்த அறிக்கையுடன் இணைத்தே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற சட்டப்பூர்வ அம்சத்தை யும் தொழிற்சங்கங்கள் முறையாக நிறைவேற்றி வரு கின்றன.  பல கோடிக் கணக்கான உழைக்கும் மக்கள் இந்த தொழிற்சங்கங்களின் அங்கமாக இடம் பெற்றி ருந்த போதிலும், அவர்களுக்கும், அவர்களது நியாய மான கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கும், அவர்தம் வலிமைக்கேற்ற பரந்துபட்ட ஊடக வெளிச்சம் ஒருபோதும் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மையாக இருந்து வருகிறது.

உலக அரங்கில்  இந்திய தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்க அமைப்புகள் தாங்கள் தேர்வு  செய்யும் அரசியல் சார்புகளுக்கு அப்பால், அடிப்படை யில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு  உழைக்கும் மக்களின் வாழ்நிலையோடு நேரடியாகத் தொடர்புடைய அம்சங்களையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகளையும் தான் சமூகத்தின் கவ னத்திற்குக் கொண்டு வருகின்றன.  சில நேரங்களில் தொழிலாளர்களின் பிரச்னைகள் நாடாளுமன்றத்தி லும் எதிரொலித்து விவாதப் பொருளாகின்றன.  உல கத் தொழிலாளர் அமைப்பின் வருடாந்திரக் கூட்டங் களில் இந்திய உழைக்கும் மக்களின் குரல்கள் மிகுந்த மதிப்புடனும், முக்கியத்துவத்துடனும் அணுகப்படு கின்றன.  சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐஎல்ஓ கூட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த அரசுத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் யாவரும் இந்தி யாவின் தொழிற்சங்கத் தலைவர்கள் என்ன கூறு கிறார்கள் என்பதை உன்னிப்பாக உற்று நோக்கினர். கூட்ட அரங்கின் பத்திரிகையாளர் மாடத்தில் அமர்ந்து  இந்தக் கண்கொள்ளாக் காட்சியை நேரடியாகக் கவனிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.  ஆனால் உள்நாட்டிலோ இந்திய தொழிற்சங்கங்களின் குரலும், கோரிக்கைகளும், இன்ன பிற செயல்பாடுகளும் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல், ஏறத்தாழ  அலட்சியப்படுத்தப்படுகிற ஒரு சூழலே நெடுங்கால மாக இருந்து வருகிறது.

அலட்சியப்படுத்தும் ஊடகங்கள்

மூத்த தொழிற்சங்கத் தலைவரும், கடந்த ஐம்பதாண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்து வருபவருமான அமர்ஜீத் கவுர் (ஏஐடியுசி-யின் பொதுச் செயலாளர்), “பெரும் பாலான இந்திய ஊடக நிறுவனங்கள், கோடானு கோடி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த  ஒரு பொது நிலைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும்  என்கிற அடிப்படை கோட்பாட்டைக்கூட அறவே மறந்து விட்டன” என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.  “தாராளமயக் கொள்கைகளின் தீவிர அமலாக்கத் தைத் தொடர்ந்தே, தொழிற்சங்கங்களை அலட்சியப் படுத்தி, புறக்கணிக்கும் போக்கு அதிகரித்துள்ளது” என்று கூறும் அமர்ஜீத் கவுர், “தொழிற்சங்கங்கள் வளர்ச்சிக்கு எதிரானவை என்பது போன்ற ஒரு தவறான சித்திரம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.  இதில் பெரும்பாலான ஊடக நிறுவனங்கள், ஆட்சி யாளர்களின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு, உழைக்கும் மக்கள் மீது பாரபட்சம் காட்டுகின்றன.  அரசு பின்பற்றும் கொள்கைகள் காரணமாகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இன்னல்களை யும், இடர்களையும் சந்திக்கிற போதும், இந்த ஊடகங்கள் அவை குறித்துக் கிஞ்சிற்றும் கவனம் கொள்ளாது, அலட்சிய மனோபாவத்துடன் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன“ என்றும் கூறுகிறார்.  “பிரிட்டனில் பணிப்பாதுகாப்பு கோரி செவிலியர்கள் நடத்திய எழுச்சிமிக்க வேலைநிறுத்தப் போராட்டம் பற்றியும், பிரான்ஸில் புதிய ஓய்வூதியக் கொள்கைக்கு எதிராக அங்குள்ள தொழிலாளர்கள் நடத்தி வருகிற  நாடு தழுவிய தொடர் போராட்டம் பற்றியும் பிபிசி, ஏஎப்பி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் மூலம் நாம்  தெரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால், இங்கே ஜார்க் கண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?” என்றும் அவர் எழுப்பிய கேள்வியும் முக்கியமானது.

தொழிலாளர் அமைப்புகள் மட்டுமன்றி, விவசாயி களின் சங்கங்கள் குறித்த ஊடக அணுகுமுறையும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.  மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதி ரான விவசாயிகள் போராட்டம் கூட மிகவும் தாமத மாகவே -  அதுவும் எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்கப் போவதில்லை என்கிற உறுதியான நிலைப்பாட்டை சங்கங்கள் மேற்கொண்டு போராட்ட இயக்கத்தைத் தீவிரப்படுத்தி நிர்ப்பந்தங்கள் கொடுத்த பிறகு - மீடியாக்களில் பரவலாக இடம் பிடித்தன.  தொழிற்சங்க இயக்க போராட்டங்கள் வாயிலாகவும் அதே  போன்ற  நெருக்கடிகள் உருவாகட்டும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று பெரும்பகுதி இந்திய  ஊடகத் துறையினரின் எண்ண ஓட்டம் இருக்கிறதோ, என்னவோ?

பிப்ரவரி 17, 2023 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை 
-தமிழ் வடிவம்: கடம்பவன மன்னன்