world

img

20 லட்சம் பேர் பேரணி

பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துள்ளன. பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும் நடைபெற்ற பேரணிகளில் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். மீண்டும் ஜனவரி 31 ஆம் தேதியன்று மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த அமைப்புகள் தீர்மானித்துள்ளன.