world

img

ஸ்பெயின் பிரதமரையும் பதம் பார்த்த பெகாசஸ்

மாட்ரிட், மே 21- ஸ்பெயின் பிரதமர் உள்ளிட்ட 200 முக்கியமான நபர்களின் அலைபேசிகளை பெகாசஸ் மென்பொ ருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தது அம்பலமாகி யுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக உலகின் பல்வேறு அரசுகள் தங்கள் அரசியல் எதிரி களை உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்தப் பிரச்சனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெகாசஸ் நிறுவனம் தனியார்களுக்கு தங்கள் மென்பொரு ளைத் தருவதில்லை என்ற வாதம், அது பயன் படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள அரசுகளுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. கொரோனா பெருந் தொற்றால் பெகாசஸ் மென்பொருள் உளவு மோசடி பின்னுக்குச் சென்றது. ஸ்பெயினில் இந்தப் பிரச்சனை மீண்டும் வெளி யாகியிருக்கிறது. நாட்டின் பிரதமர் பெட்ரோ சான் செஸ் மற்றும் ராணுவ அமைச்சர் மார்கரீட்டா ரோபிள்ஸ் ஆகிய இருவரின் அலைபேசிகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

 இவர்களோடு மேலும் பல முக்கியமான நபர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். பிரதமர் சான்செசின் அலைபேசியில் இருந்து 2.6 ஜிகா பைட் அளவுக்கு தகவல்கள் திருடப்பட்டன. 9 ஜிகா பைட் அளவிலான தகவல்கள் ராணுவ அமைச்சரின் அலைபேசியில் இருந்து களவாடப்பட்டிருக்கின்றன.  இந்த வழக்கை குற்றவியல் நீதிமன்றம் தானா கவே முன்வந்து ஏற்றுக் கொண்டுள்ளது. நாடு முழுவ தும் பெகாசஸ் மென்பொருள் பயன்பாடு பற்றி கோபத் துடன் மக்கள் விவாதிக்கிறார்கள். அதெப்படி இந்த மென்பொருளை பயனாளிகள் இறக்காமல் அலை பேசிகளுக்குள் நுழைகின்றன என்ற கேள்விக்கு,  அவர்கள் அனுமதி இல்லாமலேயே அலைபேசிக ளுக்குள் மென்பொருள் நுழைக்க முடியும் என்ற பதில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.  நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறிவிட்ட தாக மக்கள் கருதுகிறார்கள் என்று பல்வேறு ஆய்வு களின் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஆயுதமாக பெகாசஸ் மென்பொருள் பயன் படுத்தப்படும் என்று இஸ்ரேல் கூறி வந்தது.  ஆனால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது என்பது இதுவரையில் அந்த மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர்கள் அம்பலப்படுத்துகிறது. மேலும் உளவுத்  தகவல்கள் அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இஸ்ரே லின் மொசாத் ஆகியவற்றால் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;