world

img

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விழுந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்வு

பிலிப்பைன்சில், 96 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 49 பேர் மீட்கப்பட்டனர். பிலிப்பைன்சின் தென் பகுதிக்கு பாதுகாப்பு பணியிக்காக 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தெற்கு பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில், தரையிறங்க முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக விழுந்து விபத்திற்குள்ளானது.  

இந்நிலையில், தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 49 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

 

;