ரோம்,ஜூன் 18- ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தா லியில் அந்நாட்டு ஜனாதிபதி மெலோனி தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷ்யா போ ரில் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்வது எனவும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை எதிர்க்க அமெ ரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை செயல் படுத்துவதற்காக நிதி பங்களிப்பு செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு 5000 கோடி டாலர் இந்த முடிவுகளின் அடிப்படையில் உக்ரைன் அரசுக்கு 5000 கோடி டாலர் கள் நிதி கொடுக்க ஜி 7 நாடுகள் முடி வெடுத்துள்ளன. கடந்த ஆண்டு இந்தியாவில் நடை பெற்ற ஜி-20 மாநாட்டின் போது மும்பை யில் உள்ள அம்பானியின் முந்திரா துறை முகத்தில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹபிபா துறைமுகம் வழியாக ஐரோப்பாவை இணைக்கக்கூடிய புதிய பொருளாதார வழித்தடத்தை அமெரிக்கா முன் வைத்தது. சீன அரசு பெல்ட் அண்ட் ரோடு பொரு ளாதார பாதை திட்டத்தின் மூலம் வளரும் ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளுடன் பொ ருளாதார உறவுகளை வெற்றிகரமான மேம்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வளரும் நாடுகள் தங்களுடைய பொரு ளாதார வளர்ச்சிக்கும், தேவைக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை பெருமளவு சார்ந்திருக்க வேண்டிய அவசி யம் குறைந்தது. இதன் காரணமாக, சர்வதேச அள வில் வளரும் பொருளாதார பட்டியலில் உள்ள சீனாவின் அண்டை நாடான இந்தி யாவை பயன்படுத்தி பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக புதிய பொருளாதாரப் பாதையை (இந்தியா, மத்தியக்கிழக்கு, ஐரோப்பா) அமெரிக்கா உருவாக்கியது. இந்த பொருளாதார பாதையை செயல்பாட்டிற்கு கொண்டுவர தேவை யான ரயில் பாதை, துறைமுகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள் வதற்கான நிதி முதலீட்டு செயல் திட்டம் 2023 ஜி-20 மாநாட்டில் முன்வைத்த போது அமெரிக்காவின் திட்டத்தை செயல் படுத்த இந்த நிதி முதலீட்டு திட்டத்தால் இயலாது என கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த பொருளா தாரப் பாதைக்கான கட்டமைப்பு வசதி களை உருவாக்க ஜி-7 நாடுகள் நிதி உதவி செய்வது என இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.