ஹரியானா, பிப்.26- ஹரியானா மாநிலத்தில் அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியானா மாநில ஜன்வாடி மகிளா சமிதி (ஜனநாயக மாதர் சங்கம்) மாவட் டம்தோறும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி யது. போராட்டக்காரர்கள் அங்கன் வாடி ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்தும் பாஜக-வின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வும் முழக்கமிட்டனர். அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், அடக்கு முறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயலும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. அவர்களின் கோரிக் கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளது.