world

img

“சமூகக் காரணிகளே உடல்நலனைத் தீர்மானிக்கின்றன” பெல்ஜிய ‘மக்களுக்கான மருத்துவர்களின்’ இடதுமாடல்

பிரஸ்ஸல்ஸ், அக்.13- பெல்ஜியத்தில் இடதுசாரிகளும், முற்போக்கு சிந்தனை கொண்டவர் களும் இணைந்து உருவாக்கிய “மக்களுக்கான மருத்துவர்கள்” மையம் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தொடர்ந்து மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் மாகாணத்தில் உள்ள டியூர்ன் மாவட்ட த்தில் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப் பட்ட மையம் விரிவாக்கம் செய்யப் பட்டு வருவதால், மாற்று இடத்தில் தற்போது இயங்கி வருகிறார்கள். சிகிச்சை பெற வருபவர்களுக்கு போதுமானதாகவே மையம் இருந்தது. ஆனால், மருத்துவ ஊழி யர்களைச் சந்திப்பது மற்றும்  பெல்ஜியத்தின் மருத்துவ நிலைமை களை மேம்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளில் இணைந்து கொள்வது ஆகியவற்றிற்காக மையம் விரிவடைகிறது.

எப்படி உருவானது?

இந்த டியூர்ன் மருத்துவ மையம் இப்போது அமைக்கப்பட்டதில்லை. 1971 ஆம் ஆண்டில் ஒரு பொதுப் பூங்காவைப் பாதுகாப்பதற்காக இடதுசாரி வழக்கறிஞர்கள் போராடி வந்தனர். போராட்டத்தின் வடிவங்  களைத் தீர்மானிக்க ஒரு அலுவல கம் அமைத்தனர். அவர்களோடு, மருத்துவர்களும் அந்தக் கட்டிடத்தில் அமரத் துவங்கினர். அந்தப் பகுதி  மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்த மக்களின் மருத்துவத் தேவை களைக் கவனித்தனர். வழக்கறி ஞர்கள் வேறு ஒரு இடத்திற்கு நகன்றபோது ஒட்டுமொத்த கட்டிடத்தையும் மருத்துவ மையமாக மாற்றிவிட்டனர். மாவட்டத்தில் அடிப்படை சுகாதாரப் பணிகளை செய்யும் ஒரு மாற்று மாடலை உரு வாக்குவதே அவர்களது நோக்க மாக இருந்தது. மக்களுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பை உருவாக்கியதில் உடல் நலனை சமூகக் காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதுதான் அடிப்படை அம்சமாக இருந்தது. இதயத்துடிப்பை வெறும் ஸ்டெதஸ் கோப் மூலம் பார்க்காமல் “சமூக ஸ்டெதஸ்கோப்” மூலமாகப் பார்க்க வேண்டும் என்று இந்த மருத்து வர்கள் வலியுறுத்தினர். எங்கெல் லாம் தங்கள் வாழ்விடங்களை மேம்படுத்தக் கோரி மக்கள் போரா டுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களோடு போராட்டத்திற்கும் ஆதரவு தந்து மருத்துவ சேவை களையும் இந்த மருத்துவர்கள் வழங்கி வருகிறார்கள்.

இருப்பிடப் பகுதிகளில் மிகவும் தீவிரமாக மக்களுக்கான மருத்துவர் வர்கள் இயங்குகிறார்கள். அடிப் படைத் தேவைகளை அதே இடத்தில் தீர்த்து வைக்கும் அவர்கள், கூடு தல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவ மையத்திற்கு வரச் சொல்கிறார்கள். மருத்துவத் தேவை களுக்கான அரசுக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக மருத்துவ ஊழியர்கள் பேசுகிறார்கள். வணிகமயத்தின் ஆபத்துகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.

நம்பிக்கை

மக்களுக்கான மருத்துவ மையத்திற்கு வரும் நோயாளிகள், தாங்கள் பணத்தைக் கட்டினால்தான் உள்ளே நுழைய முடியும் என்ற நிலை  இங்கு இல்லை என்ற நம்பிக்கை யுடன் காலெடுத்து வைக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த பெல்ஜி யத்தின் நிலை அப்படியில்லை. ஒவ்வொரு ஆண்டும் கையில் பண மில்லை என்ற காரணத்திற்காகத் தங்கள் மருத்துவ சிகிச்சையை 9 லட்சம் பேர் தள்ளிப் போடு கிறார்கள். மக்களின் நலனை விட, வணிகமயமாக்கப்பட்ட மருத்துவ நலன்தான் முன்னிற்கிறது என்பதே இதற்குக் காரணமாகும்.

மருத்துவ நலன் என்ற அரசியல்

மக்களுக்கான மருத்துவர்கள் மையத்தில் பணியாற்றும் செவி லியர்கள் புதிய சூழலைச் சந்தித்த தாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே  பணியாற்றிய மருத்துவமனை களைப் போலல்லாமல், நோயாளி களிடம் கூடுதல் கவனத்தைச் செலுத்த நிர்வாகிகள் சொன்னபோது ஆச்சரியமாகப் பார்த்துள்ளனர். அதோடு, மருத்துவ நலன் என்பது அரசியல் என்பதைத் தாங்கள் கற்றுக் கொண்டதாகவும், அதை சிகிச்சை பெற வருபவர்களிடம் சொல்கிறோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.