world

img

அமெரிக்கத் தடைகளைத் தகர்த்தது ஈரான்

டெஹ்ரான், பிப்.17- தன் மீது அமெரிக்கா சுமத்திய எண்ணெய்  தடை உள்ளிட்டு பல்வேறு தடைகள் உடைத் தெறிந்து ஈரான் சாதனை படைத்துள்ளது. ஈரானின் செயல்பாடுகளை முடக்க அந் நாட்டின் எண்ணெய் விற்பனை உள்ளிட்ட எண்ணெய் தொடர்பான வர்த்தகம் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தி ருந்தது. இத்தகைய அழுத்தம்தான் ஈரா னைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வைத்தி ருந்த மிகவும் முக்கியமான ஆயுதமாகும். இத்தகைய தடைகள் மூலம் ஈரானுக்கான நிதி ஆதாரத்தை உடைத்தெறிவது அமெரிக்கா வின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த உத்தி படுதோல்வியைச் சந்தித்து வருகிறது.  டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது, ஈரானின் எண்ணெய் விற்பனை இல்லாமல் போய் விட வேண்டும் என்று பல்வேறு முடிவுக ளை அறிவித்தார்.

ஆனால் அவரது அந்த முயற்சி கனவாகவே போய்விட்டது. படுமோச மான தடைகளுக்கு இடையே லட்சக்கணக் கான எண்ணெய் பீப்பாய்களை விற்பதில் ஈரான் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவை மீறி பல்வேறு நாடுகள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்துள்ளன. தடைகளைத் தகர்த்தது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஈரானின் ஜனாதிபதி இப்ரா கிம் ரெய்சி, “தற்போது ஈரான் கவலைப்பட வேண்டியதில்லை. ஈரானின் எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானம் நாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது” என்றார். ஈரானின் பெட் ரோலியத்துறை அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி யும் அதை உறுதிப்படுத்துகிறார்.

அவர் அதோடு நிற்கவில்லை. விற்பனை மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் புதிய அர சின் வசம் வந்துள்ளது என்கிறார். இதற்கு முன்பாக, விற்பனையால் வரும் வருமா னத்தைத் தனது தடைகள் மூலம் அமெ ரிக்கா முடக்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பீப்பாய்கள் வரையில் ஈரானின் எண்ணெய் விற்பனை உள்ளது. மற்ற நாடுகள் தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ள வேளையில் ஈரான் தனது உற்பத்தியை அதிகரித்திருக்கிறது. தடைகள் நீக்கப் பட்டால் ஈரானின் ஏற்றுமதி இரட்டிப்பாகும். இதனால்தான் அமெரிக்கா தனது தோல்வி யை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்துள் ளது. தங்கள் கொள்ளைக்கு ஈரானின் அதிக உற்பத்தி முட்டுக்கட்டையாக இருக்குமோ என்று எண்ணெய் விற்கும் பன்னாட்டு நிறு வனங்கள் கவலை அடைந்துள்ளன.