world

img

இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை இந்தியப் பெருங்கடலிலும் தாக்குவோம்!

சனா,மார்ச்.17- இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை இந்திய பெருங்கடலிலும் தாக்குவோம் என ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  காசா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவை அழிப்பதாகக்  கூறி பாலஸ்தீனர்களை இஸ்ரேல்  ராணுவம் இனப்படுகொலை செய்து வருகிறது.  இந்த இனப்படுகொலையை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுத்த போதும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப் பிய நாடுகள் உதவியுடன் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இனப்படுகொலை  செய்து வருகிறது.  இந்நிலையில் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்கிற மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது ஏமனில் உள்ள  ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வரு கின்றனர். சில வணிகக் கப்பல்களை சிறை பிடித்துள்ளனர். கடந்த மாதம் ஹவுதி தரப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வணிக கப்பல் ஒன்று மூழ்கியது.  செங்கடல் பகுதியில் நடத்தப்படும் இத்த கைய தாக்குதல்களால் பல கப்பல் நிறு வனங்கள் அந்த கடல் வழிப்பாதையை புறக் கணித்துள்ளன. இதனால் கடல் போக்குவரத்தில் முக்கிய வணிகப்பாதையாக உள்ள  சூயஸ் கால்வாய் வருமானம் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக பொருளா தாரத்திலும் இதன்  தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் சீனா மற்றும் ரஷ்யக்  கப்பல்கள் மீது எந்த தாக்கு தலையும் ஹவுதி தொடுக்காது என அந்த நாடு களுக்கு ஹவுதி அமைப்பு உத்தரவாதம் கொடுத்தது. இதனை தொடர்ந்து மார்ச் 14 அன்று  ஹவுதி அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொலியில், செங்கடலில் ஹவுதி அமைப்பு இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது நடத்தி  வரும் தாக்குதல்கள் தொடரும் என்றும்  இந்தியப்  பெருங்கடல் பகுதியிலும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீதான தாக்குதலை   விரிவுபடுத்துவோம் என்றும்  இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் அனைத்தின் மேலும் எங்களது இலக்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  ஹவுதிகளின் மீது இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஒரு கூட்டு கடற்படையை உருவாக்கி தாக்கு தலை நடத்தி வருகின்றன.  இந்த தாக்குதலில் 34  ஹவுதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.  அதே வேளையில் மார்ச் மாதம் மட்டும் 58 பிளாஸ்டிக் ஏவுகணைகள்,  கப்பல் எதிர்ப்பு ஏவு கணைகள் மற்றும் ட்ரோன்கள்  மூலம் செங்கடல், அரேபிய கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி யில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர்க் கப்பல்களுக்கு எதிராக ஹவுதி குழு தாக்கு தலை நடத்தியுள்ளது.  நவம்பர் மாதம் முதல் ஹவுதி அமைப்பால் 73   வணிக மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.