சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதுக்கு 5 இந்தியர்கள் உடபட் 17 பேரை 'ஆக்ஷன் ஃபார் நேச்சர்' என்ற அமைப்பு தேர்வு செய்துள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம் ஆர்வலர்களுக்கு (8 முதல் 16 வயது) கடந்த 20 ஆண்டுகளாக 'ஆக்ஷன் ஃபார் நேச்சர்' என்ற அமைப்பு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதுக்கு 5 இந்தியர்கள் உடபட் 17 பேரை இந்த அமைப்பு தேர்வு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த 9 வயதான எய்ஹா தீக்சித், பெங்களூருவை சேர்ந்த 12 வயதான மன்யா ஹர்ஷா, டெல்லியை சேர்ந்த 16 வயதான நிர்வான் சோமானி, 15 வயதான மன்னத் கவுர், மும்பையை சேர்ந்த 13 வயதான கர்னவ் ரஸ்தோகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.