world

img

ஒவ்வொரு நாளும் 10 பாலஸ்தீன குழந்தைகள் ஒன்று அல்லது 2 கால்களையும் இழக்கின்றனர்

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 பாலஸ்தீன குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் பிலிப்பெ லஸ்சாரினி அதிர்ச்சி தகவலை தெரி வித்துள்ளார். இது போல கைகளையும் கால்களை யும் இழந்த குழந்தைகளை ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமை பராமரித்து வருவ தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  260 நாட்க ளுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான போரால் 2,000க்கும் அதிகமான குழந்தைகள் கைகளையும், கால்களையும் இழந்துள்ளன எனவும் லஸ்சாரினி குறிப்பிட்டுள்ளார்.   இது மட்டுமின்றி இந்த போர்க் காலத்தில் 21,000 குழந்தைகளைக் காண வில்லை என்று ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  லஸ்சாரினி இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டபிறகு போரால் பாதிக்கப் பட்டுள்ள  குழந்தைகளின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கிரீஸ் கோரி யுள்ளது. கடந்த மே மாதமே  போரில் பாதிக்கப் பட்ட பாலஸ்தீனர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய சுகாதார மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச் சர்களை பெல்ஜியம் அரசு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக இடதுசாரி கொலம்பிய அரசு மட்டுமே அறிவித்துள்ளது.