இந்தியாவில் ஒரே நாளில் கொரொனா பாதிப்பு 8000 ஐ நெருங்கியுள்ளது.நேற்றைய பாதிப்பு 5,676 ஆக இருந்த பாதிப்பு ஒரே நாளில் 2000 அதிரித்து 7,830 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 40,215 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஒருவர் உயிரிழப்பு.
சென்னையில் 110 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சைபெற்று வருவோரின் எண்ணிக்கை 2,301 ஆக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்.