world

img

நைஜீரியா கால்வாயில் பேருந்து லாரி கவிழ்ந்து விபத்து : 21 பேர் பலி

நைஜீரியா நாட்டில் கால்வாயில் பேருந்து மற்றும் லாரி கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நைஜீரியாவின் வடக்கே ஜிகாவா நகரில் ரடாபி கிராமத்தில்  கால்வாயில் வெள்ள நீர் தேங்கி இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த பேருந்து மற்றும் லாரி  கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;