ஐநாவுக்கு மீண்டும் நிதி வழங்க ஆஸ்திரேலியா முடிவு
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் நிவாரண அமைப்பு க்கு வழங்காமல் நிறுத்திய நிதி உதவிகளை மீண்டும் வழங்கத் துவங்குவதாக ஆஸ்திரேலியா அறி வித்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுக்கு ஐ.நா அதிகா ரிகள் உதவி செய்தார்கள் என ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சர்வதேச நீதி மன்றத்தில் இஸ்ரேல் முன்வைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகள் அகதிகள் அமைப்பிற்கு வழங்கி வந்த நிவாரண உதவிகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் அனுப்பும் கோரிக்கையை நிராகரித்தது ஜெர்மனி
உக்ரைனுக்கு ஏவுகணை அனுப்பு வதற்கு ஜெர்மன் நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகை யில் நீண்ட தூரம் பயணித்து தாக்கும் டாரஸ் ஏவுகணைகளை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இந்நிலையில் அந்நாட்டு நாடாளு மன்றத்தை கூட்டி அந்த கோரிக்கை மீதான வாக்கெடுப்பு நடத்தியதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நவாஸ் மகன்கள் மீதான கைது உத்தரவு ரத்து
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் மீதான கைது உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஊழலின் முக்கிய குற்றவாளிகளான ஹசன் நவாஸ், ஹுசைன் நவாஸ் ஆகியோர் மீது 2016 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் வெளிநாட்டில் தலைமறை வாகினர். இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப் பிரதமரான நிலை யில் இந்த கைது ரத்து உத்தரவு வெளியாகியுள்ளது.
60 அகதிகள் கடலில் மூழ்கி பலி
லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கிச் சென்ற 60 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள னர். லிபியாவில் நிலவி வரும் மோசமான பொருளாதாரச் சூழலால் வாழ இயலாமல் மக்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியா நாடுகளான இத்தாலி மற்றும் மால்டோவை நோக்கிச் சென்ற போது படகு கவிழ்ந்து ஒரு குழந்தை உட்பட 60 நபர்கள் பலியாகியுள்ளனர்.
ராணுவச் செலவுகளை அதிகரிக்கும் நேட்டோ நாடுகள்
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கான செலவை நேட்டோ உறுப்பு நாடுகள் தொடர்ந்து அதி கரித்து வருகின்றன. வரும் ஆண்டுகளில் இந்நாடுகளின் மொத்த ராணுவச் செலவு 1.1 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகி யவை கடந்த 9 ஆண்டுகளாகவே தொடர்ந்து ராணுவத்திற்கு மட்டும் பல லட்சம் கோடி களை செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.