கடந்த 24 மணிநேரத்தில் தென்கொரியாவில் புதிதாக 3 லட்சத்துத்து 50ஆயிரத்து 190 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தென்கொரியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2ஆவது நாளாக 3லட்சத்து 50ஆயிரத்தைத் தாண்டியது என்று தென்கொரிய செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.