world

img

இந்திய விவசாயிகள் போராட்டம்...   இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில் விவாதம்....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 100 நாட்களை கடந்து நடைபெறும் இந்திய விவசாயிகள் போராட்டம், பத்திரிகை சுதந்திரம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம்நடைபெற்றது.தில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்துஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென அதன் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி, இந்திய வம்சாவளியினரிடம்  இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கிய மனுக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.  இந்த நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சீரான விவாதத்திற்கு பதிலாக ஆதாரம் மற்றும் உண்மை இல்லாமல் நடந்த விவாதம் வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;