லண்டன்
உலகை தனது உள்ளங்கையில் வைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக மிரட்டி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸுக்கு 53.75 லட்சம் பேர் மாண்டுள்ளனர்.
பல கோடி பேர் தங்களுடைய இயல்பு நிலையை இழந்துள்ளனர்.ஒவ்வொரு வருடமும் ஒரு அபாயகரமான திரிபாக மாறி உலக மக்களை இடைவெளி இல்லாமல் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாத 10 நாடுகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் ஒரு அதிசய தகவலை வெளியிட்டுள்ளது.ஆனால் தொற்றுநோய் நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
எனினும் அந்த 10 நாடுகளை பார்ப்போம் : பசிபிக் தீவுகளில் உள்ள துவலு, டொக்கேலு, செய்ன்ட் ஹெலினா, பிட்காரின் தீவுகள், நியு, நவ்ரூ, கிரிபட்டி, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும், மத்திய ஆசிய பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தானும், இரண்டு ஆண்டுகளாக எல்லைகளை மூடி வைத்துள்ள வடகொரியாவிலும் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.