இங்கிலாந்து,ஆக.6- தெற்காசிய மாணவர்கள் எதிர் கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிராக மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக் கழகத்தின் லண்டன் வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் பிரிட்டன் கிளை போராட்டம் நடத்தியுள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தின் பிரிட்டன் கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024 ஆகஸ்ட் 1 அன்று மேற்கு ஸ்காட்லாந்து பல் கலைக்கழகத்தின் லண்டன் வளா கத்திற்கு வெளியே தெற்காசிய மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிராக இந்திய மாணவர் சங்க கிளை முழு நாள் போராட்டத்தை நடத்தியது.
பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் மதிப்பீட்டு முறையால் பல தெற்கா சிய எம்பிஏ மாணவர்கள் தோல்வி யடைந்ததை கண்டித்து இப்போ ராட்டம் நடத்தப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் ஊழி யர்களால் பாகுபாட்டை எதிர் கொண்ட மாணவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ புகார்களைப் பெற்றுள்ளோம். மேலும் இம்மாண வர்கள் தங்களுக்கு நேர்ந்த துயரம் மிக்க அனுபவங்களை சாட்சிய ளிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளார்கள். இம்மாண வர்களும் அவர்களது சகமாண வர்களும் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறாததால் பட்டம் வாங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நேரடியாக பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மாணவர்க ளும்,பல்கலைக்கழகத்தில் மூன்று வெவ்வேறு ஆண்டுகளில் இணைந்த 250க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய பட்டியலை தயாரித் துள்ளோம்.
மாணவர்களின் எதிர்கால நிலைமையின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர்சங்கத் தின் பிரிட்டன் கிளை வலி யுறுத்துகிறது.
மேலும், எவ்வித காலதாமத மின்றி கீழேகுறிப்பிட்டுள்ள நட வடிக்கைகளை எடுக்குமாறு இந்திய மாணவர்சங்கத்தின் பிரிட்டன் கிளை வலியுறுத்துகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஊழி யர்களை உடனடியாக இடை நீக்கம் செய்தல்.புகார்கள் மீது ஆக்கப்பூர்வமான விசாரணை மேற்கொள்வது.பாகுபாடு இல்லாத சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கை களை செயல்படுத்துதல்.பாதிக் கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு மற்றும் மனநல ஆலோ சனை சேவைகளை வழங்குதல்.
பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தாங்கள் சேர்க் கப்பெற்ற காலத்தை கருத்தில் கொள்ளாமல் மறுதேர்வோ அல்லது மறுமதிப்பீட்டிலோ கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற வேண்டும். மேலும் தேவைப் படும் மாணவர்களுக்கு விசா நீட்டிப்பை அனுமதிக்க வேண்டும்.
இந்த பாகுபாடு மற்றும் ஒடுக்கு முறையில் சம்மந்தப்பட்ட அனைத்து கல்வி ஊழியர்களும், நேரடியாக பாதிக்கப்பட்ட மாண வர்களுக்கு எழுத்துப்பூர்வ மன்னிப்புக் கடிதம் வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்யத்தவறினால் இனிவரும் நாட்களில் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இந்திய மாணவர் சங்கத்தின் பிரிட்டன் கிளையின் தலைவர் பிரி யம்பதா சீல் மற்றும் செயலாளர் நிகில் மேத்யூ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.