world

img

ஆப்கனில் முன்னாள் பெண் எம்.பி., சுட்டுக் கொலை

காபூல், ஜன.16-  ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர் ஹரைச் சேர்ந்தவர் முர்சல் நபிஜடா (32). இவர் முன் னாள் எம்.பி. ஆவார். இவர் தலைநகர் காபூலில் வசித்து வந்தார்.  இந்நிலையில், இவரது வீட்டிற்குள் ஞாயிறன்று இரவு புகுந்த மர்ம கும்பல், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்று விட்டது. இதில், முர்சல் நபி ஜடாவும், அவரது பாதுகாவ லர் ஒருவரும் கொல்லப்பட்ட னர். அவரது சகோதரரும், மற்றொரு பாதுகாவலரும் பலத்த காயமடைந்தனர்.  நபிஜடா, ஆப்கானிஸ் தான் நாடாளுமன்ற பாது காப்பு ஆணையத்தின் உறுப் பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவ தாக தலிபான்கள் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். தலிபான்கள் பதவி யேற்று முன்னாள் அரசின் எம்.பி ஒருவர் கொலைச் செய்யப்படுவது இதுவே முதல் முறை. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல்களில் தொடர்ந்து தலிபான்கள் ஈடு பட்டு வருவது கவனிக்கத் தக்கது.