world

img

அமெரிக்காவில் யூதர்கள் போராட்டம்

வாஷிங்டன்,அக்.19- பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா வில் உள்ள யூதர்கள் தொடர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். 

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலை யில் உலக நாடுகள் முழுவதும் பாலஸ் தீன ஆதரவு போராட்டங்களும் அதி கரித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில், யூதர்கள் இஸ்ரே லின் போர்க் குற்றங்களையும் அதற்கு அமெரிக்க அரசு கொடுத்து வரும் ஆத ரவையும் கண்டித்துப் போராடி வரு கின்றனர். 

புதன்கிழமையன்று  500க்கும் மேற்பட்ட அமைதிக்கான யூதக்குரல் என்ற அமைப்பினர் “எங்கள் பெய ரால் கொலை செய்யாதீர்கள்” என்ற வாசகங்கள் பொருந்திய உடை அணிந்து அமெரிக்க நாடாளுமன்ற குழு அலுவலகத்திற்குள் புகுந்து இஸ்ரேலின் இனவெறி போரை அமெ ரிக்கா தடுக்க வேண்டும் என கூறி போ ராட்டம் நடத்தினர். இதனைத் தொ டர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்தது காவல்துறை.  மேலும் அமெரிக்காவின் தலை நகர் முழுவதும் 10,000க்கும் அதிக மான யூதர்கள் பெரும் பேரணி நடத்தி னர். இந்தப் பேரணியின் போது யூத வெறிபிடித்த சியோனிச இஸ்ரேல் அர சின் செயல்களுக்கு உலகம் முழுவ தும் உள்ள யூதர்கள் காரணம் அல்ல.  இஸ்ரேல் யூதர்களை  பிரதிநிதித்துவப்படுத்தவில்லை!அது யூத வெறியை பிரதிநிதித்துவம் செய்கிறது. என இஸ் ரேலை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி யூதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.