அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுல் இரண்டு மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில், 4 பேர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரிடம் தொடந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் எஃப்பிஐ மற்றும் ஏ.டி.எப் அமைப்பினர் சோதனை நடத்தியதாகவும் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச்சூடு குறித்த செய்தி அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.