அரேபிய ஏற்றுமதியை பாதிக்கும் அமெரிக்காவின் வரி
அமெரிக்காவின் வரிகள் அரேபிய நாடுகளின் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியை பாதிக்கின்றது என ஐ.நா அவையின் மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCWA) தெரிவித்துள்ளது. வர்த்தக போரால் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களின் ஏற்றுமதி ஆபத்தில் உள் ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீ ரகத்தின் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொ ருட்களும் ஜோர்டானில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் அந்நாட்டின் 25 சதவீத வர்த்தகமும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏமன் மீது மீண்டும் அமெரிக்கா குண்டு வீச்சு
ஏமன் தலைநகர் சனாவில் மக்கள் கூடி இருந்த சந்தைப்பகுதியில் அமெரிக்கா குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தி யுள்ளது. இந்த தாக்குதலில் படுகொலையான வர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள் ளது. இத்தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந் துள்ளனர் என்று ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கடந்த வியாழன் இரவு மேற்கு யேமனில் உள்ள எரிபொருள் துறைமுகத்தின் மீது அமெ ரிக்கா குண்டு வீசியதில் 80 பேர் படுகொலை யானது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமையன்று போப்பின் இறுதி நிகழ்வு
போப் பிரான்சிஸ்சின் இறுதி நிகழ்வு வரும் சனியன்று (ஏப்-26) நடத்தப் படும் என்று அறிவிக்கப்படுள்ளது. ஏப்ரல் 23 முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சாண்டா மார்ட்டா ஓட்டலில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் இன் உடல் சிவப்பு அங்கி போர்த்தப் பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. போப் மறைவிற்கு பின் கர்தினால்களின் முதல் கூட்டம் ஏப்-22 அன்று நடைபெற்றது இக் கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு
சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்ப தற்காக இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலியா கிடப்பில் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப், ஹரியானா, உ.பி., உத்தராகண்ட், குஜ ராத், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து மாணவர் விசா வழங்குவதில் ஆஸ்திரேலியாவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள எத்தியோப்பியர்களுக்கு உதவி நிறுத்தம்
நிதிப் பற்றாக்குறை காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 6,50,000 எத்தியோப்பிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவிகளை நிறுத்துவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் உணவு மட்டுமின்றி மருத்துவ உதவிகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 2025 க்குள் 20 லட்சம் தாய்கள், குழந்தைகளுக்கு உயிர் காக்கும் ஊட்டச்சத்தை கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போ தைய சூழல் மிக மோசமனது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இன்று உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை
மாஸ்கோ,ஏப்.23- உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான கூட்டம் வியாழனன்று இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இநிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளை முதன்மை ஆதாரங்களின் மூலமாக தெரிந்துகொள்ளுங்கள். பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என ரஷ்யா கூறியுள்ளது. பேச்சுவார்த்தை குறித்தும் ரஷ்யாவின் நிலைப்பாடுகள் குறித்தும் ஆதாரமற்ற தகவல் களை வெளியிடுகின்றன. இது குறித்து ரஷ்ய ஜனாதிபதியின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவிடம் கேள்வி எழுப்பிய போது, சில முக்கியமான பத்திரி கைகள் கூட போதிய ஆதாரமற்ற போலி செய்திகளை வெளியிடுகின்றன. எனவே நீங்கள் உண்மையான முதன்மை ஆதாரத்தில் இருந்து செய்திகளை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் உடனடியான காலக்கெடுவை தெரிவிக்க முடியாது என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரவும் உக்ரைனின் கனிம வளங் களை கொள்ளையடிக்கவும் அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் உலக பொருளாதரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான போட்டி உச்சத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை மீண்டும் துவங்கவும் அமெரிக்கா தயாராகிறது. ஆனால் போருக்கு தொடர்ந்து உதவி செய்த இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இணைக்கவில்லை. எனவே இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்து இப்போரை தொடர சில ஐரோப்பிய நாடுகளை இணைத்துக்கொண்டு அமைதிப்படையை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்தன. இந்நிலையில் போர் நிறுத்திற்கு உடன்பட வில்லை என்றால் பேச்சு வார்த்தையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் தான் இங்கிலாந்தில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான கூட்டம் நடைபெறகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன்-ரஷ்யா நேரடியாக ஈடுபட வாய்ப்புள்ளது என வும், உக்ரைன் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகின்றது. மேலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம், ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவின் பகுதிகளாக சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் என ரஷ்யா நிபந் தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.