அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரவாக ஈடுபட்டு வந்தார்.
மேலும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு என்ற காரணத்தை கூறி 1.ஆப்கானிஸ்தான், 2.மியான்மர், 3. சாட், 4.காங்கோ குடியரசு, 5. எக்குவடோரியல் கினியா, 6.எரித்திரியா, 7.ஹைட்டி, 8.ஈரான், 9.லிபியா, 10.சோமாலியா, 11.சூடான், 12.ஏமன் ஆகிய 12 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப தடை விதித்துள்ளார்.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துருக்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 19 நாடுகளில் 10 ஆப்பிரிக்காவில் உள்ளன. அவற்றில் 9 நாடுகளில் கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் வசிக்கும் நாடுகள் ஆகும்.