நியூயார்க்கில் வலம் வந்த டிஜிட்டல் டிரக்!
நியூயார்க், ஜூன் 22 - பிரதமர் நரேந்திர மோடியை, “கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா”, (Crime Minister of India) என விமர்சிக்கும், ‘டிஜிட்டல் டிரக்’, அமெரிக்காவின் நியூயார்க் நகர முக்கியச் சாலைகளில் வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் சுற்றுப் பயணம் செய்து, அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நேரத்தில், அவரை ‘இந்தியாவின் குற்ற அமைச்சர்’ என குறிப்பிட்டு, பகிரங்கமாக நடைபெற்று வரும் டிஜிட்டல் டிரக் பிரச்சாரம் பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக, அமெ ரிக்காவுக்கு சென்று இருக்கிறார். பிரதமராக பதவி வகிக்கும் இந்த 9 ஆண்டுகளில், அமெரிக்காவிற்கு மோடி மேற்கொள்ளும் 5-ஆவது பயணம் இதுவாகும். பராக் ஒபா மா, டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் என 3 ஜனாதிபதிகளை அவர் சந்தித்து இருந்தா லும், இப்போதுதான் முதல்முறையாக அரசு முறைப் பயணம் சென்றுள்ளார். ஆசியா வில் தனது ஏகாதிபத்திய ஆட்டங்களுக்கு உதவத் தயாராகி வரும் மோடிக்கு தடபுடலான வரவேற்பு அளிக்க அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் நேரத்திலேயே, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் பறிப்பு போன்றவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைட னுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த செனட்டர் கள் உட்பட அமெரிக்க எம்.பி.க்கள் 75 பேர், ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனர். அமெரிக்க செனட்டர் கிரிஸ் வான் ஹோ லென் மற்றும் அதன் பிரதிநிதி பிரமிளா ஜெய பால் தலைமையிலான இந்த குழுவில், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருக்கும் பெர்னீ சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உட்பட 18 செனட்டர்கள் (மேலவை உறுப்பினர்கள்), 57 நாடாளுமன்ற உறுப் பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தனர்.
இதனிடையே, இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான் மையினர் மீதான தாக்குதல்கள், மதவாத மோதல்கள், இணையதள முடக்கம், கருத்துச் சுதந்திரம் பறிப்பு, பத்திரிகைச் சுதந்திர பறிப்பு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் போன்ற பல்வேறு ஒடுக்கு முறைகளைச் சுட்டிக்காட்டி, நியூயார்க் நகரில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டிஜிட்டல் டிரக் மூலமும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நிறு வனங்கள், அரசியல் தலைவர்கள், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் பயன் படுத்தும் இந்த டிரக் நியூயார்க் நகரில் மிக வும் பிரபலமாகும். அந்த வகையில், அமெரிக்க ஜனநாயக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த டிஜிட்டல் வாகனப் பிரச்சாரத்தை முன்னெ டுத்து மோடிக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள் ளனர்.
“கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா” என எழுதப்பட்ட டிஜிட்டல் திரையுடன் நியூயார்க் நகர முக்கியச் சாலைகளில் வலம்வரும், இந்த டிஜிட்டல் திரையுடன் கூடிய டிரக், இந்தியாவில் “ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் -வீராங்கனைகள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? 2005 முதல் 2014 வரை பிரதமர் நரேந்திர மோடி, ஏன், அமெரிக்காவிற்கு வரத் தடை விதிக்கப் பட்டது? எந்த விசாரணையும் இல்லாமல் ஏன், மாணவர் அமைப்பின் தலைவர் உமர் காலித் 1000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்?” என பல்வேறு கேள்விகளையும் பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளது. இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர் களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து வெள்ளை மாளிகை இரவு விருந்தில் பங் கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை அமெரிக்க ஜனாதி பதி ஜோ பைடன் திரும்பப்பெற வலியுறுத்தி, ‘இந்தியன் - அமெரிக்கன் முஸ்லிம் கவுன் சில்’ என்ற அமைப்பும் அமெரிக்காவில் கையெழுத்து இயக்கத்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.