world

img

மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காதே!

டெல் அவிவ், மே 24- மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் வகையில் செயல்பட முயலும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். இஸ்ரேலில் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தற்போதைய பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாஹு முயற்சி செய்து வருகிறார். அதற்காக அதி தீவிர வலதுசாரிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழமைவாத இஸ்ரே லிய அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த ஏராள மான நிதியை ஒதுக்கீடு செய்யவிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தயாரிக் கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் உள்ளன.

இந்த நிதிநிலை அறிக்கையை நாடாளு மன்றத்தின் முன்னால் வைத்து விவாதம் தொடங்கும் வேளையில், மக்களின் கண்டனப் பேரணி அதன் வாயிலை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கூட்டாளிகளைத் திருப்திப்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மக்களின் பணத்தை வாரி இறைப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள். அரசின் திட்டங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று பேரணியில் பேசிய வர்கள் வலியுறுத்தினர். சில நாட்களுக்கு முன்பாக, அதி தீவிர பழமை வாத இஸ்ரேலியர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு நிதியுதவி தரப் போவ தாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு அறி வித்தார். இதில் முக்கியமான நிபந்தனை என்ன வென்றால், அவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள்  வேறு எந்தத் தொழிலையும் செய்யாமல், மதப் பணிகளை மட்டும் செய்ப வராக இருக்க வேண்டும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் 6 கோடியே 75 லட்சம் கோடி அமெ ரிக்க டாலரை ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் அவர் அறிவித்தார். இந்த நிதி ஒதுக்கீடு செய்வதாக இருந்தால் ஆட்சிக்குத் தங்கள் ஆதரவு இருக்கும் என்று அதி தீவீர வலதுசாரிக் கட்சிகளில் ஒன்று நிபந்தனை போட்டது. இதை நிதிநிலை அறிக்கையில் சேர்த்தால்தான் அதை நாடாளு மன்றத்தில் நிறைவேற விடுவோம் என்றும் மிரட்டி னார்கள். அதை பெஞ்சமின் நேதன்யாஹு தலை மையிலான அரசும் ஏற்றுக் கொண்டது. ஆனால், மக்களின் எதிர்ப்பு பெருமளவில் உள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் உத்தி யால் மக்களிடம் இருந்து தனிமைப்படும் அபா யத்தில் ஆளுங்கட்சி இருக்கிறது.

எதிர்ப்பு புதிதல்ல;

பெஞ்சமின் நேதன்யாஹு முன்மொழிந்து வரும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற்போது நடந்துள்ள கண்டனப் பேரணிகள் முதன்முறையாக நடக்க வில்லை. ஜனவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வாரமும் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. அரசியல் கட்சிகளும் பல்வேறு சமூக அமைப்புகளும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து நடைபெற்ற போராட்டங்களின் வீச்சு அதிகரித்ததால், தன்னு டைய பல்வேறு திட்டங்களை நிறுத்தி வைப்பதாக மார்ச் 27 அன்று பெஞ்சமின் நேதன்யாஹு நிறுத்தி வைக்க வேண்டி வந்தது. தற்போது மேலும் பல முன்மொழிவுகளை தனது அதி தீவிர வலதுசாரி அமைப்புகளைத் திருப்திப்படுத்த முன் வைத்துள்ளார். அதற்கும் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். இஸ்ரேலின் வர லாற்றில் அந்நாட்டு அரசின் திட்டங்களுக்கு எதி ராக இவ்வளவு பெரிய அளவிலான ஆர்ப்பாட் டங்கள் முதன்முறையாக நடந்து வருகின்றன.