world

img

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மேகாலயா 74.32% ; நாகாலாந்து : 83.36%

கோகிமா/ ஷில்லாங், பிப்.27- வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்தின் சட்டப்  பேரவைத் தேர்தலுக்கான அறி விப்பு ஜனவரி 3-வது வாரத்தில் அறி விக்கப்பட்டது. இரு மாநிலங்க ளின் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் சனியன்று நிறைவு பெற்ற நிலையில், திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  மற்ற மாநிலங்களில் காலை 7  மணிக்கு தொடங்கி மாலை 6  மணிக்கு நிறைவு பெறும். வாக்கா ளர்கள் வரிசை கூடுதலாக இருந் தால் டோக்கன் மூலம் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்  கப்படும். ஆனால் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் வானிலை நிலவரம் காரணமாக மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு டோக்கன் வழங் கப்பட்டது.  60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் மாலை 4 மணி நில வரப்படி 83.36% வாக்குகள் பதி வாகின. மேகாலயாவில் தொடக் கத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் பிற்பகலுக்கு பிறகு வாக்காளர்களின் வருகை அதிகரித்ததால் மாலை 5 மணி நில வரப்படி 74.32% வாக்குகள் பதி வாகின. இரு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 அன்று நடைபெறுகிறது.

சாகர்திகியில் 73.49% வாக்குப்பதிவு

மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலு டன் மேலும் 4 மாநில சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் திங்க ளன்று இடைத்தேர்தல் வாக்குப்  பதிவு நடைபெற்றது. மாலை 5 நில வரப்படி ஈரோடு கிழக்கில் (தமிழ் நாடு) 70.58% வாக்குப்பதிவும், சாகர்திகியில் (மேற்கு வங்கம்) 73.49% வாக்குப்பதிவும்,  ராம்கரில் (ஜார்க்கண்ட்) 67.96% வாக்குப்பதி வும் பதிவாகியது. லும்லா (அருணாச்சல பிர தேசம்) சட்டப்பேரவை வாக்குப் பதிவு திங்களன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் லும்லா தொகுதியின் வாக்  குப்பதிவு நிலவரங்கள் தொடக்கம்  முதலே வெளியாகவில்லை. அங்கு என்ன நடக்கிறது என மாலை 5 மணி வரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்  பிடத்தக்கது.