வாஷிங்டன், டிச.1- 2019 ஆம் ஆண்டில் சிரியாவில் அப்பாவி மக்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய தாக்கு தல்கள் பற்றி விசாரணை நடத்த அமெரிக்க ராணுவத் தலைமையகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று சிரியாவின் நகரமான பகோசில் பயங்கரவாதிகள் நடமாடு வதாகச் சொல்லி அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந் தன. இதில் 64 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 70 பேர் கொல் லப்பட்டனர். பயங்கரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்டதாக அமெ ரிக்க ராணுவம் செய்தி வெளி யிட்டது. உலகம் முழுவதும் இந்தச் செய்தி இவ்வாறாகவே பரவியது. ஆனால் சில அமெரிக்க ஊடகங் கள் மேற்கொண்ட புலனாய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி யாகின. தாக்குதல் நடத்தப்போகும் இடத்தில் அப்பாவி மக்கள் குழுமியி ருந்தது அமெரிக்க ராணுவத்திற்கு முன்பே தெரியும் என்றும், தெரிந்து தான் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டது என்றும் அதில் தெரிய வந்தது.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக் கைகள் வைக்கப்பட்டு வந்தன. சிரியாவில் அமெரிக்கா மேற் கொண்டு வரும் போரில் மிக அதிக மான அளவில் பெண்களும், குழந் தைகளும் கொல்லப்படுவது இதுவே முதன்முறை என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
மேலும் அந்தச் செய்தியில் “எந்த வொரு எச்சரிக்கையும் தரப்படாமல் அமெரிக்காவின் எப்-15ஈ போர் விமா னங்கள் அப்பாவி மக்கள் கூடியிருந்த இடத்தின் மீது சுமார் 225 கிலோ எடை யுள்ள குண்டை வீசியது. பெரும் சேதத்தை இந்தக் குண்டு ஏற்படுத்தி யது. புகை மறைந்தவுடன் ஒளிந்து கொள்ள இடத்தைத் தேடியவாறு மக்கள் அங்கும் இங்குமாக ஓடி னார்கள். அவர்களைத் தேடிய படியே வந்த ஒரு போர் விமானம் 900 கிலோ எடையுள்ள குண்டு ஒன்றை அவர்கள் மீது வீசியது. சிறிது நேரம் கழித்து அதே எடையுள்ள மற்றொரு குண்டை வீசியது. முதல் குண்டில் தப்பியவர்கள் அடுத்தடுத்த குண்டுகளில் வீழ்ந்தனர்” என்று தெரிவித்துள்ளது. இதைப் போர்க்குற்றம் என்று குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஊட கங்கள், இதை அமெரிக்க ராணுவம் மறைத்து விட்டது என்று கூறி யுள்ளன. தொடர்ந்து அம்பலப்பட்ட நிலையில், தற்போது இது தொடர் பான விசாரணைக்கு உத்தரவிடுவதாக அமெரிக்க ராணுவ அமைச்சர்லாயிட் ஆஸ்டின் ஒப்புக் கொண்டுள்ளார்.