world

img

ரத்த ஆறை நிறுத்துங்கள்

நேப்ளஸ், பிப்.23- மிகக் கொடூரமான முறையில் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதியில் உள்ள நேப்ளஸ் நகரத்திற்குள் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விவாதிக்க சர்வதேச அமைப்புகளின் கூட்டங்கள் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரிக்கை விடுத்துள்ளது. நேப்ளஸ் நகரத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவம் ஒரு  பதின்பருவ சிறுவன் உள்ளிட்ட 11  பேரைக் கொலை செய்திருக்கிறது. அப்போது நடந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். 2005 ஆம் ஆண்டில் மேற்குக் கரைப்பகுதியை இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்ட தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் களில் இதுவே பெரியதாகும் என்று அப்பகுதியில் உள்ள பாலஸ்தீன நிர்வாகம் கூறியிருக்கிறது. சர்வதேச சமூகத்திற்கு விடுத் துள்ள கோரிக்கையில், ஐக்கிய நாடு கள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்,  அரபு லீக், இஸ்லாமிய ஒத்து ழைப்புக்கான அமைப்பு ஆகிய வற்றின் கூட்டங்கள் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என்றும், அந்த  அமைப்புகளின் வாயிலான இஸ்ரே லின் கொடூரமான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, பாலஸ் தீன மக்களுக்குப் பாதுகாப்பு தர  வேண்டும் என்றும் கோரியிருக் கிறார்கள்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீனத் தூதர் ரியாத் மன்சூர் பேசுகையில், “இஸ் ரேலிய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேப்ளசில் நடந்த தாக்குதல்கள் தற்செயலாக நடந்ததல்ல. இவை திட்டமிட்டே நடக்கின்றன. வேறு சில பிரச்சனை களில் சர்வதேச சமூகம் கவனமாக இருக்கும். பாலஸ்தீன விவகாரத்தில் தலையிட மாட்டார்கள் என்று இஸ்ரேல் நம்புகிறது” என்று தெரி வித்தார். பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள நிலைமை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக மாறி யிருக்கிறது என்று ஐ.நா. பொதுச் செய லாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபை எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், “இந்தத் தாக்கு தல்கள் மேலும் பரவாமல் பார்த்துக் கொள்வதே எங்களின் முதல் பணியாக இருக்கும். பதற்றத்தைக் குறைப்பது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவோம்” என்றார். யார் தாக்குதல்களுக்கு ஆளா கிறார்களோ அவர்கள் பக்கம் ஐக்கிய நாடுகள் சபை நிற்க வேண்டும். இந்த விஷயத்தில் பாலஸ்தீன மக்க ளோடு அவர்கள் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் நம்பகத்தன்மை போய்விடும். அதனால் அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்தி ரத்தம் ஆறாக ஓடு வதைத் தடுங்கள் என்று பாலஸ்தீனம் வலியுறுத்தி உள்ளது.