world

img

சகாப்தத்தின் சாட்சி நெல்சன் மண்டேலா - v மல்லை சத்யா, மதிமுக துணைப்பொதுச்செயலாளர்

அடிமைத்தளையிலிருந்து மார்க்சியத்தை உள் வாங்கி உலக நாடுகள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் வைகறை பொழுதுகளில் தென் ஆப்பிரிக்கா நாட்டில்  18- 07- 1918 அன்று நெல்சன் மண்டேலா பிறந்தார்.        இளம் பிராயம் பள்ளி, கல்லூரி, விளையாட்டு என்று சுழன்று ஓடிவிட்டது. இவர் ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரர். 1942 பிஏ பட்டம். அதற்கு பின் வழக்கறி ஞர் என்று படிப்படியாக முன்னேறி சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்று தனது இனக் குழுக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீறி நண்பனுடன் இணைந்து ஊரை விட்டு வெளியேறி பெரிய நகரங்களில் சுரங்கங்களில் பணியாற்றச் சென்றார். அப்போதுதான் நிறவெறியில் ஒதுக்குதலும் ஓரங்கட்டு தலையும் சந்திக்க நேர்ந்தது. இதிலிருந்து விடுவிப்பதற்கு சுய போராட்டம், சட்டப் போராட்டம் என்று கடந்து வந்த வேளையில் ஆப்பிரிக்கா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1962 ஏப்ரல் 6 வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவில் கால் பதித்த தினத்தன்று சட்ட மறுப்பு போராட்டத்தை முன்னெடுத்து “ஆப்பிரிக்கா ஆப்பிரிக்க வினருக்கே” என்ற முழக்கத்தை முன்வைத்து களம் கண்டார்.

ஆயுதபாணி போராட்டத்திற்கு இளைஞர்களை தயார் செய்து ஆயுத  பயிற்சி அளிக்க ஆயுதம் வாங்கு வதற்காக 1962 ஆம் ஆண்டு அடிஸ் அபாவில் ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரப் போராட்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பங்கேற்க  மண்டேலாவிற்கு அழைப்பு கொடுக்கப் படுகிறது. மகிழ்ச்சியோடு முதன் முதலாக நாடு கடந்து சென்று பல நாட்டுத் தலை வர்களைச் சந்தித்து பேசி ஆயுதம், நிதி உதவி கோருகிறார்.உத்தரவாதம் கிடைத்தது. மகிழ்ச்சியோடு நாடு திரும்பினார்.  அதற்குப் பின் ஆயுதம் வாங்கவோ, படை திரட்டவோ வாய்ப்பு இல்லாமல் 1962-ல் நெல்சன் மண்டேலா 44 வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .அது ஒரு நாள், இரு நாள் அல்ல, 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 11-02- 1990 ஆம் ஆண்டுதான் நெல்சன் மண்டேலா 71 வயதில் விடுதலை செய்யப்பட்டார். “செய்து முடிக்கும் வரை செய்ய முடி யாதது போலத்தான் இருக்கும்” என்ற மண்டேலாவின் பொன்மொழிக்கு இலக்கணமாக, விடுதலை அடைந்த பின் பேசும் போது, “என் விடுதலை முடிவல்ல. அரசியல் அதிகாரத்தில் வெள்ளை இனவெறி அரசுக்கு முடிவு கட்டி கருப்பர்களுக்கு சம உரிமை கிடைக்க செய்யும் போராட்டத்தின் துவக்கமாக அமையும்” என்றார்.

பாரத ரத்னா விருது  வழங்கி கௌரவிப்பு

1990 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இந்தியர் அல்லாத ஒருவருக்கு முதலும் கடைசியுமாக நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.  அன்றைய பிரதமர் -சமூகநீதி காவலர் வி.பி.சிங் தலைமையிலான அரசு நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது. 1993 ஆம் ஆண்டு உலகின் உயர்ந்த விருதான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப் பட்டார். 1994 ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்டு வெள்ளையர் அல்லாத முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக பொறுப்பேற்றபின் தென்னாப்பிரிக்கா பள்ளிகளில் தமிழ், இந்தி, உருது உள்ளிட்ட இந்திய  மொழிகள் விருப்பப்பாடமாக கற்பிக்கப் பட்டன.  ஐந்தாண்டு கால ஜனநாயக ஆட்சிக்கு பின்னால் 1999 ஆம் ஆண்டு அவர் மீண்டும் தேர்தலில்  போட்டி யிட வேண்டும் என்று கட்சி விரும்பியது,  குடும்பம் விரும்பியது. அதைக் கடந்து  தென்னாப்பிரிக்கா மக்கள் கண்ணீ ரோடு வேண்டுகோள் வைத்தனர். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. தொலைக்காட்சிகள் விவாதித்தன. ஆனால் அவர் ஏற்றுக்கொண்ட லட்சிய  முடிவிலிருந்து பின்வாங்காமல் இறுதி வரை உறுதியாக இருந்து தன்னுடைய சக போராளி ஒருவரின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்தார். 

தீவிர அரசியலில் இருந்து விலகி  இருந்தாலும் சிறந்த சமூக செயல் பாட்டாளராக பல்வேறு நிலையில் கள மாடி வந்தவர் 2013 ஜூன் 8ஆம் தேதி உடல்நலம் குன்றினார். அன்று முதல்  தொடர் சிகிச்சை பெற்று வந்த நெல்சன் மண்டேலா 05-12-2013 அன்று 95வது வயதில் இயற்கை எய்தினார். உலக மக்களின் கண்ணீர் துளிகளைப் பெற்ற மகத்தான மனிதராக மண்டேலா விளங்கினார். 19 ஆம் நூற்றாண்டில் உலகம் அதிக மாக உச்சரித்த பெயர்கள், காந்தி, காரல்  மார்க்ஸ், லெனின், மாவோ, சன்யாட்சன், ஹோசிமின் ,உமர் முக்தார், யாசர் அராபத்,ஆபிரகாம் லிங்கன்.  அந்த வரிசையில் நெல்சன் மண்டேலா வும் அசைக்க முடியாத சக்தியாக வலி மையான ஆளுமையாக திகழ்கின்றார். இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சி யகத்தில் உலகம் ஆராதிக்கின்ற ஆளு மைகளின் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.  இங்கு நெல்சன் மண்டேலா வுக்கு வெண்கல சிலை எழுப்பப்பட்டது. இது குறித்து மண்டேலா பேசுகின்ற போது, 1962 ஆம் ஆண்டு நான் கண்ட கனவு நனவாகி இருக்கிறது என்றார். நெல்சன் மண்டேலா பிறந்த ஜூலை 18ம் தேதியை ஐ.நா. மன்றம் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறி வித்து  ,உலக அளவில் சிறைவாசிகளின் உரிமைகள் சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட வற்றுக்கு வழிகாட்டுதல் வழங்கும் தினமாக அறிவித்துள்ளது.