பகாசுர நிறுவனங்களில் வேலைகளை செயற்கை நுண்ணறிவால் செய்து கொள்ள முடியும் என்ற நிலை வருவதால் லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரு நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம், ஆளெடுக்கும் பணியை நிறுத்தப் போகிறது. தற்போது பணி செய்து கொண்டிருப்பவர்களில் 7 ஆயிரத்து 800 பேரின் வேலைகளை செயற்கை நுண்ணறிவு எடுத்துக் கொண்டு விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டியிராத மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களின் வேலைகள் பறிபோய்விடும் என்று புளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டியிராத பணியிடங்கள் கிட்டத்தட்ட 26 ஆயிரம் இருக்கும். ஐபிஎம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் இது 10 விழுக்காடாகும். மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் இந்த நிறு வனங்களில் பணியாற்றுகிறார்கள். கடைசியாக பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தபோது 5 ஆயிரம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். குறிப்பாக, நியூயார்க்கின் அர்மான்க் என்ற இடத்தில் உள்ள அலுவலகத்தில் ஏற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டன. எத்தகைய இடங்கள் நிரப்பப்படாமல் விடப்படும் என்பதற்கு நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பதில் எதுவும் இல்லை. அதே வேளையில், ஒட்டுமொத்தமாக வேலைக்கு ஆட்களே எடுக்கப் போவதில்லை என்ற முடிவையும் அவர்கள் எடுக்கவில்லை. ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கூறுகையில், “பணியிடங்களை நிரப்புகையில் நாங்கள் கவனமாகத் தேர்வு செய்யப் போகிறோம். வாடிக்கையாளர்கள் அல்லது தொழில்நுட்பத்தில் எந்தவிதப் பாதிப்பும் வராமலும் பார்த்துக் கொள்வோம்” என்றார். புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய நிறுவனங்களையும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், உடனடியாக ஐபிஎம் மட்டுமல்ல, மேலும் பல பெரிய நிறுவனங்களும் பணியிடங்களை நிரப்பா மல் விடப் போகிறார்கள்.
உடனடி வேலை யிழப்பை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வியாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவை நடை முறைப்படுத்தப் போகும் வேலைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பதவி விலகல் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்ற ழைக்கப்படும் ஜெப்ரி ஹிண்டன், கூகிள் நிறு வனத்திலிருந்து விலகியிருக்கிறார். பெரிய பொறுப்பில் இருந்து அவர் விலகியதற்கே, செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே காரணமாகும். 75 வயதான இவர்தான் செயற்கை நுண்ணறிவை வளர்த்தெடுத்தார். தற்போது அந்தத் தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கே பெரும் ஆபத்தானது என்று கூறுகிறார். இந்தத் தொழில் நுட்பத்தை வளர்த்தெடுத்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார். கூகிள் நிறுவனத்தில் இருந்து விலகி விட்டதால், இனிமேல் சுதந்திரமாக செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேச முடியும் என்று தெரி வித்துள்ள அவர், நான் கூகிளை விமர்சனம் செய்யவே அப்பொறுப்பில் இருந்து விலகியதாகக் கூறுகிறார்கள். கூகிளை இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வளவு பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படாமல் பேச முடியும். சொல்லப்போனால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில், இதுவரையில் கூகிள் மிகவும் பொறுப்பா