ஈகுவடாரில் மாஃபியா கும்பல்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடு மையான உள்நாட்டு போர் நடைபெற்று வரு கிறது. மோதல் துவங்கிய போது மாஃபியா கும்பல் அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர லையில் துப்பாக்கிகளோடு புகுந்து பயங்கர தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட வழக்கறிஞரை மாஃபியா கும்பல் படுகொலை செய்துள்ளது. அந்த கொலைகாரர்களில் இரு வரை காவல்துறை கைதுசெய்துள்ளது.