அதானி குழுமத்தை தொடர்ந்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ-வான ஜேக் டோர்சியின் 'பிளாக்' நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ-வான ஜேக் டோர்சியின் பிளாக் நிறுவனம் சட்ட விரோதமான முறையில் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், மிகையான புள்ளி விவரங்களை வைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிளாக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமிர்தா அஹுஜா மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாக் பங்குகளை ஜாக் டார்சி, அமிர்தா அஹுஜா உள்ளிட்டோர் மொத்தமாக விற்றதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது.