அமெரிக்காவில் பிரதமர் வருகையையொட்டி அவர் வருவதற்கு முதல் நாள் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தினை திரையிடவுள்ளதாக சர்வதேச மனித உரிமை குழு அறிவித்துள்ளது.
வருகின்ற 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளர். இதேபோல் அவர் ஆஸ்திரேலியா சென்றபோதும் அவர் அவருவதற்கு முதல்நாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டு இது தொடர்பாக அந்நாடு பிரதமர் மோடியுடன் விவாதிக்க வேண்டுமென கண்டங்கள் எழுந்தன.
தற்போது அமெரிக்காவில் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது சர்ர்சையை ஏற்ப்படுத்தியுள்ளது .இந்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது