world

img

பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்

பாரிஸ், ஏப்.12- ஓய்வூதியம் தொடர்பான தகுதி களை மாற்றி அமைத்துப் புதிய திட்டத்தைக் கொண்டு வர மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கரு த்தைக் கேட்குமாறு பிரான்ஸ் அரசை அந் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடு மாறு கோரி இதுவரையில் 12 நாடு தழு விய வேலை நிறுத்தங்கள் பிரான்சில்  நடந்துள்ளன. இருப்பினும், நாடாளு மன்றத்தை மீறி அத்திட்டத்தை நடை முறைப்படுத்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முனைந்துள்ளார். மக்களின் போராட்டங்களை முழுமையாக ஆதரித்து பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகள் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் 39வது மாநாடு பிரான்சின் மார்செல்லி நகரில் நடந்தது. 42 ஆயிரம் உறுப் பினர்களைக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க் கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றி ருந்தது. தேர்தல்கள் நிறைவு பெற்று ஓராண்டு ஆகப் போகும் நிலையில், அக்கூட்டணியில் இருந்து விலகி சுயேச்சையான இயக்கங் களை நடத்த கட்சி முடிவு செய்திருக்கிறது. மீண்டும் கட்சியின் பொதுச் செய லாளராக ஃபேபியன் ரசல் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இருந்த ரசல் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். மாநாட்டில் பேசிய அவர், “பிரான்ஸ் மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து, புதிய ஓய்வூதியத் திட்ட த்தைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறேன். அதுமட்டும்தான் நீங்கள் செய்ய வேண்டிய நல்ல பணியாக இருக்க முடியும். மக்களின் கருத்தைக் கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தலாம்” என்று கூறினார்.