கிட்டோ,பிப்.21- ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா போதை மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்கைக் காக அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.இது சமூகத்தை ராணுவ மயமாக்கி அமைதியான அரசியல் சமூக சூழலை அழிப்பதற்கு ஒப்பானது என கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஈக்வடாரின் ஜனாதிபதி கில்லர்மோ லாசோவால் கையெழுத்திடப்பட்ட ஒப்ப ந்தத்தை அந்நாட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
அவ்வொப்பந்தத்தை செயல்படுத்த தற்போதைய ஜனாதிபதி டேனியல் அங்கீகரித்துள்ளார். ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் மாஃபி யா கும்பல்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வரு கிறது. இதனால் அந்நாட்டு ஜனாதிபதி மாபியா கும்ப லுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது எனவும் நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
லாசோ தலைமையிலான ஈக்வடார் அரசு, 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே அமெ ரிக்காவின் தெற்கு படைத் தலைவர் ஜெனரல் லாரா ரிச்சர்ட்சன் உள்ளிட்ட அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் பல சுற்று பேச்சுக்களை நடத்தி வந்துள்ளது.
அப்போதே பலரும் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு தோல்வியடைந்த மற்றும் மிக மோசமான திட்டம் என்று விமர்சித்துள்ளனர். தோல்வியடைந்த கொலம்பியா திட்டம் கொலம்பியாவுடன் அமெரிக்க ராணுவம் இது போன்று ஏற்படுத்திய ராணுவ ஒப்பந்தத்தினால் அந்நாடு எந்த பயனையும் அடையவில்லை. இதற்காக “கொலம்பியா திட்டம்” என்ற பெய ரில் 2000 - 2015 ஆம் ஆண்டுக்கு இடையில் கிட்டத்தட்ட 100 கோடி டாலர்களை அந்த நாடு செல வழித்தது.
இந்த கூட்டு ராணுவத் திட்டத்தில் 70 சதவீத கொலம்பிய ராணுவத்திற்கு பயிற்சி, உதவி மற்றும் ஆயுதம் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த திட்டம் 15 ஆண்டு களாக கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது. சமூகத்தை ராணுவமயமாக்கியது.இது அந்நாட்டின் அரசியலை, சமூகச் சூழலை கடுமையாகச் சிதைத்தது. எதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதோ அதை நிறைவேற்ற வில்லை.
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வன்முறை கள் சிறிதும் குறையவில்லை. மாறாக அக்கும் பல்கள் அதிநவீன ஆயுதங்களுடன் நவீன உல கத்திற்கு ஏற்ப வளரவே செய்தன. மேலும் போதைக் கும்பல்களுக்கு இடையி லான ஆயுத மோதல்கள், கொலைகள் என சமூக பதற்றங்கள் அதிகரித்து வந்தன. 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் தகவலின்படி ஈக்வடாரில் 2016 மற்றும் 2022 க்கு இடையில் இந்த கொலைகள் 407 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரசியல் ஆய்வாளர்களான ஆண்டர்ஸ் தைபா ஆரியாஸ் , அண்ட்ரெஸ் மாட்ரிட் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையின்படி ஈக்வடார் தற்போது எதிர் கொண்டு வரும் போதை மாபியாக்கள் வன் முறைகளில் பெரும்பாலானவை அதை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் அதே பொருளாதார மற்றும் அரசியல் உயரடுக்கினரால் தூண்டப்பட்டவை என தெரிவித்துள்ளனர்.
இது மறைமுகமாக நவதாராளவாத பொருளா தாரக் கொள்கைகள் மூலம் சமூக திட்டங்கள் மற்றும் அரசு நிறுவனங்களை வலுவிழக்கச் செய்கிறது.மேலும் நேரடியாக போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் உள்ள இணைப்புகள் மூலம் நடைபெறுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.