world

img

மக்கள் வாடுகையில் நீங்கள் வாரிச் சுருட்டுவதா?

லண்டன், ஆக.3- எரிபொருட்களின் விலைகள் கடுமை யான ஏறியுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் விநியோகம் செய்யும் நிறு வனங்களில் உலகிலேயே பெரிய நிறு வனங்களில் ஒன்றும், பிரிட்டனின் முன்னணி நிறுவனமுமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் பெரும் லாபத்தை ஈட்டி யிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஜூன்  மாதம் நிறைவு பெற்ற காலாண்டில் 200 கோடி யூரோக்களை லாபமாக சம்பாதித் திருப்பதாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இதுவரையில், அதாவது நடப்பாண்டின் முதல் ஆறு  மாதங்களில்  590 கோடி யூரோ வருமானம் என்றும் கூறியிருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் களுக்குப் பெரும் அளவில் பங்குத் தொகை யாக பணத்தை வழங்கப் போவதாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் போராளிகள் கடுமையான எதிர்ப்பு தெரி வித்திருக்கிறார்கள். நாடு முழுவதும் மக்கள் எரிபொருட்களின் விலையுயர்வால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலை யில், பங்குதாரர்களுக்கு பணத்தை வாரி  வழங்குவது அநியாயம் என்று கண்டித்துள் ளனர்.

அரசின் தாராளம்

மிகவும் கடுமையான வரியை எண் ணெய் நிறுவனங்கள் மீது அரசு விதித் திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அந்த வரி விதிப்பில் ஏராளமான ஓட்டை கள் இருப்பதாகத் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால், விதிவிலக்குகள் நிறுவனங் களுக்கு சாதகமாகவே அமைந்தன. விலை கள் தொடர்ந்து ஏறினாலும், அதைக்கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட வில்லை.  வரியைக் கணக்கில் எடுக்கும்போது, வரும் வருமானத்தில் இருந்து புதிய முத லீடுகளைச் செய்வதாக இருந்தால் அதற்கு வரிவிலக்கு என்ற அம்சத்தை அரசு சேர்த்தது. இந்த விதிவிலக்கைப் பயன் படுத்தி பல மோசடிகள் நடந்திருப்ப தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்துத் தொழிற்சங்கத் தலைவர் பால் நோவக் கூறுகையில், “முறை யான வரியை சுமத்தாமல் கோடிக்கணக்கான யூரோக் களை நிறுவனங்களின் வசமே அரசு விட்டு வைக்கிறது. தங்கள் தேவைகளை நிறை வேற்ற முடியாமல் மக்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் முதலாளிகள் பணத்தை வாரிச் சுருட்டுகிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தொட ர்ந்து எழுப்பி வரும் அமைப்பொன்றின் நிர்வாகியான டெஸ்ஸா கான், “எரி பொருட்களின் விலைகளைக் குறைப்ப தற்கான வாய்ப்புகள் அரசிடம் இருந்தன. நிறுவனங்களுக்குக் கிடைத்த  பெரும் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை வரியாகப் பெற்றிருக்க முடியும். பெரும் எண்ணெய் நிறு வனங்களின் பக்கம் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் சாய்ந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் விரக்தியடைவார்கள் என்று தனக்கும் தெரியும் என்று பிரிட்டன் பிரதம ரான ரிஷி சுனாக் கூறுகிறார். புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை உரு வாக்கும் திட்டங்களுக்காகவே பெரிய நிறுவனங்களுக்கு வரிவிலக்குகள் தரப்படுவதாக சமாளிக்க முயற்சித்திருக் கிறார். அவரது கருத்திற்கு எதிர்க்கட்சி களும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான திட்டங் களில் பெரிய நிறுவனங்கள் முதலீடுகள் செய்யும் என்பது முட்டாள்தனமான எண்ண மாகும் என்று டெஸ்ஸா கான் குற்றம் சாட்டியுள்ளார்.