லண்டன், நவ.22- ஐரோப்பிய நாடுகளில் கடும் நெருக்கடி கள் நிலவி வரும் நிலையில், பிரிட்டனில் ஏகபோகங்களின் சுரண்டல்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும் என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. பிரிட்டனில் கடுமையான விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை நாடு எதிர் கொண்டு வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. அதற்கேற் றாற்போல தொழிலாளர்களின் ஊதியம் உயர வில்லை. தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. தொழில்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பெரும் அளவில் வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. வேலை நிறுத்தம் வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்புகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு வேலை நிறுத்தம் வேண்டும் என்று தொழிலாளர்கள் வாக்க ளித்து வருகிறார்கள். இந்த மூன்று துறைக ளில் மட்டும்தான் தொழிலாளர்கள் திரண்டுள் ளனர் என்றும், மற்ற துறையினர் போராட்டக் களத்திற்கு வரவில்லை என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளையும் சேர்ந்த சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பது என்று முடிவெடித்துள்ளன. பிரிட்டனின் நான்காவது பெரிய சங்கமான ராயல் செவிலியர் சங்கம் வேலை நிறுத்தத் திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து வாக்களித்திருக்கிறார்கள். ஸ்காட்லாந்தின் கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்ட அழைப்புகள் அனைத் துத்துறை மக்களின் அதிருப்தியையே காட்டுகிறது என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த கட்சியின் செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் கார்டன், “இந்தப் புதிய அறிவிப்புகள் பெரும் நம்பிக்கை ஏற் படுத்தியுள்ளன. ஒருங்கிணைந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற உறுதியோடு இருக்கும் சங்கங்களின் நடவடிக்கைகளை இது பலப்படுத்தும். ஊதியத்தை முடக்கும் ஆட்சியாளர்களின் திட்டத்தை இந்த ஒற்றுமை உடைத்தெறியும். உயர்ந்துள்ள விலைவாசியின் அடிப்ப டையில் ஊதிய உயர்வை தொழிலாளர்கள் பெற உதவும்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய முன்னணி
ஏகபோகங்களின் சுரண்டல்களுக்கு எதிராக பிரிட்டனில் உள்ள அனைத்து தொழி லாளி வர்க்க அமைப்புகளும், இடதுசாரிக ளும் ஒன்று சேர்ந்த ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்ட வேண்டும் என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக் கிறது. போராட்டக்களத்தில் அனைத்துத் துறையினரும் குதித்து வரும் இந்த நேரம்தான் அதை உருவாக்குவதற்கான சரி யான நேரம் என்று சுட்டிக்காட்டியுள்ள கட்சி, அதை நோக்கிய ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாவதற்குத் தங்கள் முழுமையான ஆதரவு உண்டு என்றும் அறிவித்திருக்கிறது. உலகளாவிய அளவில் சாதாரண மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள் என்று கூறியுள்ள கார்டன், “உலகமயமாகியுள்ள நிதி முதலாளித்துவத்தை அகற்றி விட்டு, சோசலிச சமுதாயத்தை உருவாக்குவதே உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. அனைத்துப் போராட்டங்களும் அதை நோக்கியதாக மாற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாடு பற்றியும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயற்குழு விவாதித்தது என்றும் செய்தி யாளர்களிடம் கார்டன் கூறினார்.