லண்டன், ஏப்.19- பல்வேறு துறையினரும் நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் அதே வேளையில், பிரிட்டனின் சிறைத்துறையும் கடும் நெருக்கடியில் சிக்கி யிருப்பதாகத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி யுள்ளன. பிரிட்டனில் உள்ள சிறைகள் நல்ல முறையில் இருப்பதாகவே சொல்லப்படுவது வழக்கமாகும். சமூகத் தணிக்கைகளுக்கு சிறைகள் உட்படுத்தப் ப டுகின்றன. கிட்டத்தட்ட அனைத்துச் சிறைகளுமே இந்தத் தணிக்கைகளில் சொல்லப்படும் தகுதி களைப் பெற்றவையாகவே இருந்து வருகின்றன. சிறைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு என்ன வகையான மருத்துவக் கவனிப்பு கிடைக்குமோ, அதே வகையான கவனிப்புகள் சிறையில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும். உரிமங்களும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்பிலான செலவு சிறைத்துறைக்கான செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகை அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில், சிறைத்துறையின் தரம் பாதிக்கப்பட்டு வருவ தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒவ்வொரு சிறைக்கும் ஒரு ஆளுநர், அதிகாரிகள், சிறை மேலாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் இவர்களின் எண் ணிக்கை சிறைகளில் உள்ளவர்களின் எண் ணிக்கைக்கு ஏற்ப இருந்தது.
ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்தன. அனைத்துக் கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, விசா ரிப்பதற்காக அமைக்கப்பட்டது. நவம்பர் 2022ல் அமைக்கப்பட்ட இந்தக்குழு, சிறைத்துறை அதி காரிகள் மற்றும் மேலாளர்கள் எண்ணிக்கையில் 600 பேர் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளது. அதோடு, சிறையிலேயே உயிரிழக்கும் சம்ப வங்கள் குறித்துப் பல்வேறு தொண்டு நிறுவனங்க ளையும் இந்தக்குழு விசாரித்துப் பல தகவல் களைச் சேகரித்திருக்கிறது. இந்தக்குழு முன்பாக விசாரணைக்கு வருமாறு பிரிட்டனின் நீதித்துறை அமைச்சர் டேமியன் ஹிண்ட்ஸ் மற்றும் சிறைகளுக்கான தலைமைச் செயல் அதிகாரி மிஷேல் ஜர்மான் ஹோவ் ஆகிய இருவரையும் அழைத்தனர். ஊழியர்கள் பற்றாக் குறையைச் சுட்டிக்காட்டி, அதைப் போக்குவதற்கு எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வரு கின்றன, காலியாக இருக்கும் பணியிடங்களை எப்போது நிரப்பப் போகிறீர்கள் என்பன உள்ளிட்ட வினாக்களைத் தொடுத்தனர். சிறையிலேயே உயி ரிழப்பதைத் தடுக்க எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டன என்றும் கேட்டார்கள்.
சங்கங்கள் கவலை
சிறைத்துறைப் பணி பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்று கூறியுள்ள சிறைத்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மார்க் ஃபேர்ஹர்ஸ்ட், “இதற்கு மேலும் சிறைத்துறை யைச் சூழ்ந்துள்ள நெருக்கடியை அலட்சியப் படுத்திவிட முடியாது. சிறைத்துறைகளில் உள்ள இயக்குநர்கள் இனிமேலும் உண்மைகளை ஒளித்து வைத்துக் கொள்ள முடியாது. மிகக்குறை வான ஊதியம், வன்முறைகள் நிறைந்த பணி யிடங்கள் மற்றும் காலத்துக்குப் பொருத்தமில் லாத ஓய்வு பெறும் வயது போன்றவற்றை வைத்துக் கொண்டு அடிப்படைப் பணிகளை மேற் கொள்ள ஆட்கள் முன்வருவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது” என்றார். மேலும் பேசிய அவர், “காலிப் பணியிடங்க ளில் ஆட்களை நியமிக்காமல், கட்டமைப்பு களில் முதலீடுகளைச் செய்யாமல் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு ஆதரவு தராமல் இருந்தால், நமது நாட்டின் சிறைகள் வெறும் மனி தர்களை அடைத்து வைக்கக்கூடிய கிடங்கு களாக மட்டுமே இருக்கும். நாம் விரும்பக்கூடிய, நம்பிக்கைக்கான அல்லது மறுவாழ்வுக்கான இடமாக அது இருக்க முடியாது” என்று எச்ச ரித்தார். தங்கள் குழுவின் விசாரணைகளில் வெளி யான அம்சங்களை உடனடியாகத் தீர்க்க ஏற் பாடுகள் அவசியம் என்று நாடாளுமன்றக்குழுவும் தெரிவித்துள்ளது.