world

img

அமெரிக்கா:  பனிப்புயல் தாக்கி 5 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அட்லாண்டிக் பகுதியிலிருந்து வடகிழக்கு வரையிலும் பனிப்புயல் காரணமாக பல வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் பனிப்புயலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் கியூமோ வியாழனன்று தெரிவித்துள்ளார். மேலும் பென்சில் வேனியாவில் கிளிண்டன் பகுதியில் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியது. இதில் வாகனங்கள் குவிந்து கிடந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் பனிப்புயல் தாக்கியதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

;