world

img

மத்திய கிழக்கில் படுகொலைகளை அரங்கேற்றும் அமெரிக்கா; பேச்சுவார்த்தையும் நடத்துகிறது

வாஷிங்டன்,ஜன.5- மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி பிராந்தியம் முழுவதும் போர் பதற்றத்தை தூண்டி வரும் அமெரிக்கா நான்காவது முறையாக  வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனை பேச்சுவார்த்தைக்காக அனுப்புகிறது.  அக்டோபர் 7 இஸ்ரேல்- பாலஸ்தீன (ஹமாஸ்) போர் துவங்கிய போது ஒரு  சில நாட்களில் ஹமாஸ் குழுவை அழித்து காசா முழுவதையும் ஆக்கிரமிப்போம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக போர்  நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் வெல்ல முடியவில்லை  என்றால் மத்திய கிழக்கில் நம்மால் வாழ முடி யாது என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் விரக்தி அடைந்து பேசுகிற அளவிற்கு இஸ்ரேல் ராணுவம் சேதங்களை சந்தித்து வருகிறது. இதே வேளையில் பாலஸ்தீன பொது மக்களின் மீது குறிவைத்து நடத்தப்படும் இஸ்ரே லின் தாக்குதலால் 22,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். இந்த பின்னணியில் ஏமனின் ஹவுதி, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளுடனும்  ராணுவம் அறிவிக்கப் படாத போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உருவாக்கிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றால்  கடந்த சில தினங்களில் மட்டும் ஹவுதி வீரர்கள், லெபனானில்   ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டனர். ஈரானில் சுலைமானி நினை விடத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. அதன் மறுதினம் இராக் தலைநகரில் அமெரிக்க படைகளால்  இராக் ராணுவ பிரிவின் மக்கள் அணிதிரட்டல் படைப் (popular mobilization forces) பிரிவின் கமாண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது மத்திய கிழக்கு பிராந்தியம் முழு வதும் பெரும் போர் பதற்றத்தை தூண்டி உள்ளது.இந்நிலையில் போர் துவங்கியது முதல் தற்போதுவரை அனைத்து  பேரழிவுக ளுக்கும் காரணமான அமெரிக்கா, நான்காவது முறையாக துருக்கி, கிரீஸ், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீன மேற்குக் கரை மற்றும் எகிப்து ஆகிய மத்திய கிழக்கு  நாடுக ளுக்கு ஜனவரி 4 முதல் 1 ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடத்த சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார்.  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படுகொலைக ளுக்கு எதிராக மத்திய கிழக்கில் உள்ள நாடு கள் அல்லது ஹிஸ்புல்லா,ஹவுதி  உள்ளிட்ட அமைப்புகள் முழுஅளவிலான போரில் இறங்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய அளவில் மற்றொரு போருக்கும் பேரழிவிற்கும் வழி வகுக்கும்.