world

img

“அமெரிக்காவே நம்பர் 1 பயங்கரவாதி”

டோக்கியோ, மே 22- பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 உச்சி மாநாட்டிற்கு எதிராக ஜப்பான் மக்கள் ஆயி ரக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய ஏழு நாடுகள் ஜி-7 அமைப்பில் இடம் பெற்றுள்ளன. சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வழங் கப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிடம் அந்தப் பொறுப்பு உள்ளது. நடப்பாண்டுக்கான உச்சி மாநாட்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடத்துவது என்று அவர் முடிவெடுத்தார். இந்தக்  கூட்டத்தில் ஜி-7 உறுப்பு நாடுகள் மட்டுமில்லாமல், இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கோமோரோஸ் ஆகிய நாடுகள் மற்றும் சில பன்னாட்டு அமைப்புகளும் இதில் பங்கேற்றுள்ளன. இந்த உச்சிமாநாட்டிற்கு ஹிரோஷிமா நகரைத் தேர்வு செய்தது ஜப்பான் நாட்டு மக்கள் மத்தி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்ற நிலை யிலும், தான் உருவாக்கிய அணுகுண்டைப் பரி சோதனை செய்யும் விதமாக நாகசாகி மற்றும்  ஹிரோஷிமா ஆகிய இரு நகரங்கள் மீதும் குண்டுகளை வீசியது. தற்போது உச்சிமாநாடு நடைபெறும் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். அதோடு, அந்தக் குண்டு வீச்சில் வெளிப்பட்ட கதிரியக்கத்தால் தலைமுறை, தலைமுறையாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

1945 ஆம் ஆண்டில் இருந்தே, அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளை குறைத்து மதிப்பிடுவ தற்காகத் தனது பிரச்சாரத்தை அமெரிக்கா மேற்கொண்டு வந்தது. இந்த இரண்டு நகரங்கள் மீது குண்டு வீசி மக்களை பரிசோதனைக்கு உள்ளாக்கிய அமெரிக்கா தனது செயலுக்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று மக்கள் கோரி வருகிறார்கள். ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் அத்தகைய கோரிக்கை மீண்டும் எழுந்தது. ஆனால், அவர் மன்னிப்புக் கோர முடியாது என்று மறுத்துவிட்டார். இத னால் உச்சிமாநாடு நடக்கும் ஹிரோஷிமா நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பல்வேறு  அமைப்புகள் முடிவெடுத்தன. அமைப்புகளின் அழைப்பை ஏற்று ஆயிரக்க ணக்கான மக்கள் கண்டனப் பேரணியில் பங்கேற்ற னர். “அமெரிக்கப் பயங்கரவாதிகளே நம்பர் 1 பயங் கரவாதிகள்”, “நேட்டோ கூட்டணியை நிறுத்து”, “போருக்கான தயாரிப்பில் இறங்காதே”, “ஜி-7 அமைப்பைக் குப்பையில் வீசு”, “ஜப்பான்-அமெரிக்கா ராணுவக்கூட்டணி வேண்டாம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை களை ஏந்தியவாறும், இவற்றை முழக்கமிட்ட வாறும் மக்கள் ஹிரோஷிமா நகரில் வலம் வந்த னர். உச்சி மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மாநாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள ஃபுனைரி டாலிச்சி பூங்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

உக்ரைன் நெருக்கடி

உக்ரைன் நெருக்கடி, உலகப் பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகள் பற்றி ஜி-7 உச்சிமாநாட்டில் விவா தித்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய பிரச்சனைகளில் முடி வுகள் எடுக்கப்படுவது சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். உக்ரைன் நெருக்கடியில் ஜி-7 அமைப்புக்கு எந்தவிதமான பாத்திரமும் இல்லை என்பதே தற்போதைய நிலை யாக உள்ளது. போர் தொடர்வதையே அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன.

பயணம் ரத்து

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். அமெரிக்காவின் கடன் நெருக்கடி அளவைத்தாண்டி சென்று விட்டதால், வரம்பை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை உள்ள குடியரசுக்கட்சியினர் ஒத்து ழைக்கவில்லை. கடன் வரம்பை உயர்த்தா விட்டால் பெரும் பிரச்சனை உருவாகும் என்பதால், ஜி-7 மாநாடு நிறைவு பெற்றவுடன் பைடன் அமெரிக்காவுக்கு திரும்புகிறார்.