அங்காரா, பிப்.15- பிப்ரவரி 6 ஆம் தேதியன்று ஏற்பட்ட ஐந்து பெரும் நிலநடுக்கங் களால் பாதிக்கப்பட்டு, இடிபாடு களுக்கு இடையில் சிக்கிக் கொண்டி ருந்தவர்களில் சிலர் 204 மணி நேரங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ள னர். பல்வேறு நாடுகளின் உதவி யுடன் துருக்கியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் காரமன்மராஸ் என்ற பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதி யில் நடுக்கம் ஏற்பட்டு ஏழாவது நாள் கழித்து சிலர் மீட்கப்பட்டுள் ளனர். 205 மணிநேரம் இடிபாடுகளுக் கிடையில் சிக்கிக் கிடந்த சேகுல் பயிர் என்ற 35 வயதுப் பெண்மணி உயிரோடு இருப்பதைக் கண்ட மீட்புப் படை வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டு, மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று, இடிபாடு களுக்கு இடையில் சிக்கி 204 மணி நேரம் கழித்து ஒருவர் ஹடாய் என்ற நகரில் மீட்கப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் வசித்து வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அவர் இடிபாடுகளுக் கிடையில் சிக்கியிருந்தார். மேலும் இருவர் காரமன்மராஸ் பகுதியில் இருந்து 198 மணிநேரங்கள் கழித்து மீட்கப்பட்டனர். இதுபோன்ற மேலும் பலரைக் காப்பாற்ற வாய்ப்புகள் உள்ளனவா என்பது பற்றி மீட்புப்படை ஆய்வு செய்து வருகிறது. இடிபாடுகளை அகற்று கையில் பெரும் கவனம் தேவை என்ற அறிவுரை மீட்புப்படை வீரர் களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து நிவாரணப் பொருட் களை அனுப்பி வைக்கின்றன. இரண் டாவது கட்டமாக ஏராளமான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சில விமானங்கள் துருக்கியில் இறங்கியுள்ளன. பாதிக் கப்பட்ட பகுதிகளுக்கு அவற்றைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு களை துருக்கி அரசு செய்திருக் கிறது.
பலி எண்ணிக்கை 75,000?
துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த பெரும் நிலநடுக்கங் களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையில் இருக்கும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த அமைப்பு எச்சரித்துள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி நிகழ்ந்த இந்தப் பேரழிவில் 11 ஆயிரத்திற்கும் மேலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. எட்டு நாட்கள் கழித்து சிலர் உயிரோடு மீட்கப்பட்டாலும், ஆயிரக்கணக் கானோர் இடிபாடுகளுக்கிடையில் புதைந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடைகளைத் தொடரும் அமெரிக்கா
சிரியாவில் பெரும் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளபோதும் அங்கு நிவா ரணப் பணிகளை மேற்கொள் வதற்கு அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள பல்வேறு தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவா ரணப் பொருட்கள் செல்வதை அமெரிக்க ஆதரவு தீவிரவாதிக் குழுக்களும் தடுக்கின்றன. இக்குழுக்களின் உதவியுடன் எண்ணெய் வளம் மிகுந்த பகுதி களை ஆக்கிரமித்துள்ள அமெரிக் காவும், நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல விரும்பவில்லை.
தேவை உடனடி உதவி
அடுத்து வரும் மூன்று மாதங்கள் சிரியாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செய லாளர் அன்டோனியோ குட்டெ ரெஸ், “உடனடியாக 39 கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலர் சிரியா வுக்கு நிவாரண உதவிக்காகத் தேவைப்படுகிறது. சர்வதேச சமூகம் இந்த உதவியைச் செய்ய வேண்டும். பெரும் அழிவை ஏற் படுத்தியுள்ள நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒரு வார காலத்திற்குப் பின்பாக லட்சக்கணக்கானோர் வீடு களை இழந்திருக்கிறார்கள். கடும் குளிரில் இருக்க இடமில்லாமல் தவிக்கின்றனர். நாங்கள் இயன்ற வரை முயற்சிக்கிறோம். ஆனால் அது போதுமானதாக இல்லை. எந்த வேகத்தில் நிவாரணம் சென்ற டைய வேண்டுமோ, அந்த வேகத்தி லும், தேவையான அளவிலும் நிவா ரணம் சிரியாவில் சென்றடைய வில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.