பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்தான் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் அறிவிக்கப்பட்டுள்ளார். ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்தான் ஷெபாஸ் ஷெரிப் என்பது குறிப்பிடத்தக்கது.