புதுதில்லி,செப்.26- மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மருந்துகள் உட்பட 53 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இல்லை என்று இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாராசிட்டமால், பான் டீ, கால்சியம், விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ், ஆன்டி-ஆசிட் பான்-டி, பாராசிட்டமால் உட்பட 53 மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வில் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்ததோடு அவை அனைத்தும் போலியான தயாரிப்பு என்றும் விளக்கமளித்துள்ளன.