world

img

சீனாவில் புழுதி புயல்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று காலை புழுதி புயல் வீசியது. இந்த புயல் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு, மோசமான நிலைமையை  ஏற்படுத்தியுள்ளது.
மங்கோலியா மற்றும் சீனாவின் வடமேற்குப் பகுதிகளிலிருந்து புழுதி புயல் வீசியது. இதனால் பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள கான்சு, ஷாங்க்சி ஹெபெய் உள்ளிட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் சீனாவின் வானிலை ஆய்வுத்துறை இன்று காலையில் அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை அறிவித்தது.
பெய்ஜிங்கில் காற்று மாசு (Air Quality Index) அதிகபட்சமாக 500ஐ எட்டியது. சில பகுதிகளில் ஒரு கன மீட்டருக்குச் சுமார் 2,000 மைக்ரோகிராம் அளவிலான PM10 துகள்கள் இருந்தன.
சீனாவின் வடபகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளதால், அதன் அருகில் உள்ள கோபி பாலைவனத்திலிருந்து வீசும் புயல் சீனாவிற்குள் புழுதியைக் கொண்டுவருவது வழக்கம். இது பொதுவாக ஒவ்வோரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிகழும்.
கடந்த சில வாரங்களாகப் பெய்ஜிங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்று மாசுபாடு மோசமான நிலையை அடைந்துள்ளது.