world

img

11 வயதில் தூங்கி, 21 வயதில் எழுந்த எலன்  

பிரிட்டனில் 11 வயதில் தூங்கிய சிறுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது 21 வயதில் விழித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

19 ஆம் நூற்றாண்டு, பிரிட்டனில் மருத்துவத் துறை நவீனமயமாக்கப்பட்டது மற்றும் தொழில்துறை புரட்சி நடந்து கொண்டிருந்தது.  இந்த சம்பவங்கள் நடுவே, ஒரு சுவாரசியமான கதையும் வெளியாகி உள்ளது.    

‘டிரிபனோசோமியாசிஸ்’ எனப்படும் தூக்கம் தொடர்பான பாதிக்கப்பட்ட இளம் பெண் எலன் சாட்லர், 1859 மே 15 அன்று 12 குழந்தைகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தார். எலனின் தந்தை வில்லியம் சாட்லர் ஒரு விவசாயி, அவர் ஒரு விபத்தில் இளம் வயதிலேயே உயிரிழந்தார். அதன்பிறகு எலனின் தாய் மறுமணம் செய்துகொண்டார்.  

1871 ஆம் ஆண்டு வரை எலனுக்கு எந்த குறையும் இல்லாமல் இருந்த நிலையில், மார்ச் 29 அன்று, தூங்கிய எலன் மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை. அவரை பலரும் எழுப்பிப் பார்த்தும் பயனில்லாமல் போனது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் எலன் வீட்டுக்கு வந்து அவரை எழுப்ப முயற்சித்தும் எதுவும் வேலை செய்யவில்லை.  

மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் உறக்கத்திலிருந்து எழுப்ப மூளைக்குத் தேவையான ஒரேக்ஸின் என்ற வேதிப்பொருள் உருவாகவில்லை. அதனால்தான் அவர் கண்விழிக்கவில்லை என்பதை மட்டுமே கண்டறிந்தனர். இப்படியே ஆண்டுகள் செல்ல 1880 ஆம் ஆண்டில் தனது 21 வயதில், எலன் எழுந்தார். ஆனால் அவரின் தாய் அதற்கு முன்பே காலமாகியிருந்தார்.    

மீண்டும் எலன் இப்படி தூங்கிவிடுவாரோ என்று பயப்படாமல், எலன் தனது திருமணம் செய்து கொண்டார். அதனைதொடர்ந்து ஒரு விவசாயியை திருமணம் செய்து கொண்டு 6 பிள்ளைகளுக்குத் தாயான எலன், 1901ஆம் ஆண்டு காலமானார்.

இதையடுத்து அவரது பிள்ளைகளில் ஒருவர் தனது தாயைப் பற்றிய இந்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.