பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82) கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். ஸ்வீடனில் 1958-ல் முதல் முறையாகவும், பிரேசிலில் 1962-ல் இரண்டாம் முறையாகவும், மெக்சிகோவில் 1970-ல் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கோப்பையை தனது கைகளில் பெற்றார். உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்.