இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்த நிலையில், இரு நாடுகளும் பல ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, பாலஸ்தீனத்தை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு இஸ்ரேல் மக்கள் ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலை ஒரு காரணமாக வைத்து கொண்டு இஸ்ரேல் பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது கொடூர தாக்குதலை நடத்த ஆரம்பித்தது.
இஸ்ரேல் சர்வதேச போர் விதிகள் எதையும் மதிக்காமல் பள்ளி கூடங்கள், மருத்துவமனைகள் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தின், காசாவில் இஸ்ரேல் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பில் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் ராணுவம், லெபானானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் லெபனான் மட்டும் சிரியாவில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் மட்டும் வாக்கி டாக்கிகள் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த மின்னணு சாதனங்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் தான் என ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
இந்நிலையில், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொலை வெறித்தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 300க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினாலும், லெபனான் மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் தொடரும் என்று இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.