world

img

இனவெறி பாசிசத்தை அடக்குவோம்; அகதிகளை பாதுகாப்போம்!

லண்டன்,ஆக.8- இங்கிலாந்தில் தீவிர வலதுசாரிகளின் இன வெறியை அடக்குங்கள், கலவரத்தை நிறுத்துங் கள்; அடைக்கலம் தேடி வரும் அகதிகளை பாது காப்போம் என பாசிச எதிர்ப்பு இயக்கம் பேரணி நடத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்  இங்கிலாந்தின்  சவுத்போர்ட் பகுதியில் மூன்று சிறுமிகள் கத்தி யால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட னர். அந்த கொலையை செய்தது ஒரு முஸ்லிம் அகதி என தீவிர வலதுசாரிகள் பொய்ச்  செய்தி களை பரப்பினர். 

இதனை தொடர்ந்து தீவிர வலதுசாரி அமைப்புகள்  அகதிகளுக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டனர். தொடர்ந்து கருப்பினத்த வர்கள், முஸ்லிம்கள், மசூதிகள், வெளிநாட்ட வர்களை  மீது தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகாலமாக இங்கிலாந்து உள் ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகள் அக திகளுக்கு எதிராக இனவெறியை தூண்டி விட்டு அரசியல் செய்து வருகின்றனர். இதன் விளை வாக தற்போதைய பொய்ச்  செய்திகளின் பின்ன ணியில்  பிரிஸ்டல், பிரைட்டன், பர்மிங்காம், லிவர்பூல், ஹேஸ்டிங்ஸ்,   வால்தம்ஸ்டோ உட்பட நாடு முழுவதும்பெரும் கலவரங்கள்வெடித்துள்ளன. 

இதுவரை 100 க்கும் அதிகமான கலவரக்கா ரர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள் ளது.எனினும் இனவெறி அரசியல் செய்யும் அமைப்பினர் மீண்டும் 100 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் இனவெறி க்கு எதிராகவும்,அமைதியை நிலை நாட்டவும், அகதிகளின் பாதுகாப்பிற்காகவும் இனவெறி எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 25,000 க்கும் அதிக மானோர்  மாபெரும் பேரணி நடத்தி இனவெறி பாசிச குழுக்கள்  100 இடங்களில் நடத்த இருந்த பேரணியை முறியடித்துள்ளனர்.

இந்த பேரணியில் இனவெறி பாசிசத்திற்கு எதிராக, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இனவெறி பாசிசத்தை அடக்கு வோம், இங்கு வெறுப்புக்கு இடமில்லை, அகதி களுக்கு அடைக்கலம் உண்டு, அகதிகள் நமது எதிரி அல்ல, நமது எதிரிகள் சிறிய படகுகளில் வருவது இல்லை, அவர்கள் ஆடம்பரக்  கார்களில் நம்மிடையே வலம் வருகிறார்கள் என பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் பதாகை களை ஏந்தியும் கோசம் எழுப்பியும்  வந்தனர்.